என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் சுழற்பந்து வீச்சுக்கு பாதிப்பு: பிங்க் பால் போட்டி குறித்து மிஸ்பா கருத்து
Byமாலை மலர்18 Oct 2016 11:55 AM GMT (Updated: 18 Oct 2016 11:55 AM GMT)
பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் சுழற்பந்து வீச்சு பனித்துளியால் பாதிக்கப்படுகிறது என்று மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் அடிலெய்டில் நடைபெற்றது. அதன்பின் துபாயில் பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி துபாயில் கடந்த 13-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 346 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்.
டேரன் பிராவோவின் அபார சதத்தால் வெற்றியை நோக்கி பயணித்த வெஸ்ட் இண்டீஸ் கடும்போராட்டத்திற்குப் பின் 12 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதன்முறையாக பிங்க் பந்தில் பகல் - இரவு டெஸ்டில் விளையாடிய அனுபவம் குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா கருத்து தெரிவித்தார்.
அப்போது ‘‘பனித்துளி ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது பிங்க் பந்தின் தன்மையை பாதிக்கிறது. இதனால் பந்து அதிக அளவில் டர்ன் ஆகவில்லை. அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்களால் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியவில்லை. துபாய் ஆடுகளம் நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்களில் அதிக அளவில் வெடிப்பு ஏற்பட்டு கரடுமுரடாக காணப்படும். ஆனால், இரவில் பனி பெய்ததால் ஆடுகளம் அதிக அளவில் மாறவில்லை’’ என்றார்.
நியூசிலாந்து அணிக்கெதிரான ஒரு டெஸ்ட் போட்டியை பகல் - இரவு போட்டியாக நடத்த இந்தியா முயற்சி செய்தது. ஆனால், இந்தியாவில் பனித்துளி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் நியூசிலாந்து பகல் - இரவு ஆட்டத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும், இந்திய கிரிக்கெட் வாரியமும் பிங்க் பால் போட்டி நடத்தும் திட்டம் தற்போது இல்லை என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
டேரன் பிராவோவின் அபார சதத்தால் வெற்றியை நோக்கி பயணித்த வெஸ்ட் இண்டீஸ் கடும்போராட்டத்திற்குப் பின் 12 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதன்முறையாக பிங்க் பந்தில் பகல் - இரவு டெஸ்டில் விளையாடிய அனுபவம் குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா கருத்து தெரிவித்தார்.
அப்போது ‘‘பனித்துளி ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது பிங்க் பந்தின் தன்மையை பாதிக்கிறது. இதனால் பந்து அதிக அளவில் டர்ன் ஆகவில்லை. அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்களால் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியவில்லை. துபாய் ஆடுகளம் நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்களில் அதிக அளவில் வெடிப்பு ஏற்பட்டு கரடுமுரடாக காணப்படும். ஆனால், இரவில் பனி பெய்ததால் ஆடுகளம் அதிக அளவில் மாறவில்லை’’ என்றார்.
நியூசிலாந்து அணிக்கெதிரான ஒரு டெஸ்ட் போட்டியை பகல் - இரவு போட்டியாக நடத்த இந்தியா முயற்சி செய்தது. ஆனால், இந்தியாவில் பனித்துளி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் நியூசிலாந்து பகல் - இரவு ஆட்டத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும், இந்திய கிரிக்கெட் வாரியமும் பிங்க் பால் போட்டி நடத்தும் திட்டம் தற்போது இல்லை என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X