search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி டிராபி: மும்பை அணியில் இளம் வீரர் அர்மான் ஜாபர் சேர்ப்பு
    X

    ரஞ்சி டிராபி: மும்பை அணியில் இளம் வீரர் அர்மான் ஜாபர் சேர்ப்பு

    ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணியில் இளம் வீரர் அர்மான் ஜாபர் இடம்பிடித்துள்ளார். இவர் இந்த வருடம் தொடக்கத்தில் வங்காள தேசத்தில் நடைபெற்ற U-19 உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்.
    ரஞ்சி டிராபி தொடரில் வருகிற 6-ந்தேதி மும்பை அணி தமிழ்நாடு அணியுடன் மோதுகிறது. இதற்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் இளம் வீரரான அர்மான் ஜாபர் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் வங்காள தேசத்தில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். அதேபோல் கடந்த மாதம் நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 69 ரன்கள் சேர்த்து முத்திரை பதித்தார். இதனால் ரஞ்சி டிராபிக்கான மும்பை அணியில் இடம்கிடைத்துள்ளது.

    கடந்த வருடம் 41-வது ரஞ்சி கோப்பையை கைப்பற்றிய மும்பை அணிக்கு கேப்டனாக இருந்த ஆதித்யா தாரேதான், தற்போதும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ரஞ்சி டிராபிக்கான மும்பை அணி விவரம்: 1. ஆதித்யா டாரே (கேப்டன்), 2. அர்மான் ஜாபர், 3. அபிஷேக் நாயர், 4. தவால் குல்கர்னி, 5. ஷர்துல் தாகூர், 6. சூர்யகுமார் யாதவ், 7. நிகில் பட்டீல், 8. கவுஸ்துப் பவார், 9. ஜெய் பிஸ்டா, 10. அகில் ஹெர்வாத்கர், 11. சூபியான் ஷாயிக், 12. பல்விந்தர் சிங் சாந்து (ஜூனியர்), 13. துஷார் தேஷ்பாண்டே, 14. விஷால் தபோல்கர், 15. விஜய் கோஹில்.
    Next Story
    ×