search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.30 லட்சம் பரிசு: மத்திய மந்திரி அறிவிப்பு
    X

    தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.30 லட்சம் பரிசு: மத்திய மந்திரி அறிவிப்பு

    ரியோ பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்த 4 பேருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மந்திரி தாவர் சந்த் கெலாட் அறிவித்துள்ளார்.
    புதுடெல்லி: 

    இந்தியா சார்பில், ரியோ பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்த 4 பேருக்கும் ஊக்கத்தொகை வழங்க சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

    இதன்படி தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் மற்றும் ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜாஜாரியா ஆகியோருக்கு தலா ரூ.30 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வென்ற தீபா மாலிக்குக்கு ரூ.20 லட்சமும், வெண்கலம் வென்ற வருண் சிங்குக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என்று அந்த துறையின் மந்திரி தாவர் சந்த் கெலாட் அறிவித்துள்ளார். 
    Next Story
    ×