என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சச்சின், டோனி குறித்த கருத்து: சந்தீப் பட்டீல் மீது பி.சி.சி.ஐ. தலைவர் சாடல்
Byமாலை மலர்27 Sep 2016 3:31 PM GMT (Updated: 27 Sep 2016 3:31 PM GMT)
சச்சின், டோனி ஆகியோரின் ஓய்வு குறித்து முன்னாள் தலைமை தேர்வாளர் சந்தீப் பட்டீல் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அப்போது அவர் ஓய்வு பெறாவிடில் அணியில் இடம்பிடித்திருக்கமாட்டார். அதுபோல், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெற்றபோது, அவரது ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது என்று தனது பதவி காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து சந்தீப் பட்டீல் நினைவு கூர்ந்தார்.
தற்போது இந்த கருத்துக்கு பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனுராக் தாகூர் மேலும் கூறுகையில் ‘‘சந்தீப் பட்டீல் தற்போது முன்னாள் தேர்வுக்குழு தலைவர். அவர் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்திருக்கக் கூடாது.
அவரது பதவியில் இருக்கும்போது இதே கேள்விக்கு வேறுமாதிரி பதில் அளிதிருந்தார். தற்போது பதவிக் காலம் முடிந்த பின்னர் மாறுபட்ட கருத்துக்களை கூறியுள்ளார். இதுபோன்று கருத்து தெரிவித்தது முற்றிலும் நியாயமற்றது.
தேர்வு குறித்த நியாயமற்ற, தேவையற்ற கருத்துக்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவருடன் மேலும் நான்கு தேர்வாளர்கள் இருந்தனர். அவர்கள் எதுவும் பேசவில்லை. இதை அவர் கட்டாயம் தவிர்த்திருக்க வேண்டும்’’ என்றார்.
தற்போது இந்த கருத்துக்கு பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனுராக் தாகூர் மேலும் கூறுகையில் ‘‘சந்தீப் பட்டீல் தற்போது முன்னாள் தேர்வுக்குழு தலைவர். அவர் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்திருக்கக் கூடாது.
அவரது பதவியில் இருக்கும்போது இதே கேள்விக்கு வேறுமாதிரி பதில் அளிதிருந்தார். தற்போது பதவிக் காலம் முடிந்த பின்னர் மாறுபட்ட கருத்துக்களை கூறியுள்ளார். இதுபோன்று கருத்து தெரிவித்தது முற்றிலும் நியாயமற்றது.
தேர்வு குறித்த நியாயமற்ற, தேவையற்ற கருத்துக்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவருடன் மேலும் நான்கு தேர்வாளர்கள் இருந்தனர். அவர்கள் எதுவும் பேசவில்லை. இதை அவர் கட்டாயம் தவிர்த்திருக்க வேண்டும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X