என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரசிகர்களின் ‘இந்திய கனவு டெஸ்ட்’ அணி: டோனி கேப்டன், அஸ்வினுக்கு இடம்
Byமாலை மலர்26 Sep 2016 11:24 AM GMT (Updated: 26 Sep 2016 11:24 AM GMT)
பி.சி.சி.ஐ. ஏற்பாடு செய்திருந்த வாக்கெடுப்பின் மூலம் ரசிகர்கள் தேர்வு செய்யப்பட்ட அனைத்து கால சிறந்த இந்திய அணியில் டோனிக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதனுடன் அஸ்வினும் இடம்பிடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 500-வது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு அனைத்து கால சிறந்த அணியை தேர்வு செய்வதற்காக ரசிகர்கள் இடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பி.சி.சி.ஐ. தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் இந்த வாக்கெடுப்பை நடத்தியது.
இன்று அந்த வாக்கெடுப்பின் முடிவு வெளியிடப்பட்டது. இதில் இந்திய கனவு அணிக்கு டோனி கேப்டன் மற்றும் விக்கெட் கிப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தொடக்க வீரர்களாக சுனில் கவாஸ்கர், விரேந்திர சேவாக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கவாஸ்கருக்கு 68% வாக்குகளும், சேவாக்கிற்கு 86% வாக்குகளும் விழுந்தன.
3-ம் நிலையில் களமிறங்க ஏறத்தாழ ஏகமனதாக ராகுல் டிராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 96% வாக்குகள் கிடைத்தது. 4-ம் நிலையில் சச்சின் டெண்டுல்கர் 68% வாக்குகள் பெற்றார்.
லஷ்மண் 5-ம் நிலைக்காக 58% வாக்குகள் பெற்றார். இவருக்கும் கங்குலிக்கும் கடும் போட்டி நிலவினாலும் கங்குலி 38% வாக்குகளையே பெற்றார்.
அடுத்ததாக ஆல்ரவுண்டர் நிலைக்கு கபில்தேவ் 91% வாக்குகளுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அடுத்தபடியாக 90% வாக்குகளுடன் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் டோனி திகழ்கிறார். நம்பர் 8-ற்கு அஸ்வின் 53% வாக்குகள் பெற்றார். 92% வாக்குகளுடன் அனில் கும்ப்ளே 9-ம் இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த இடத்திற்கான தேர்வில் ஜவகல் ஸ்ரீநாத் 78% வாக்குகள் பெற்றார்.
ஸ்ரீநாத்துக்கு அடுத்தபடியாக ஜாகீர்கான் 83% வாக்குகள் பெற்றார்.
12-வது நபருக்கான தேர்வில் ரசிகர்கள் யுவராஜ் சிங்கிற்கு 62% வாக்குகள் அளித்தனர்.
ரசிகர்களின் கனவு அணி: சுனில் கவாஸ்கர், சேவாக், ராகுல் திராவிட், சச்சின், லஷ்மண், கபில்தேவ், டோனி, அஸ்வின், கும்ப்ளே, ஸ்ரீநாத், ஜாகீர்கான், யுவராஜ் சிங் (12-வது வீரர்).
இன்று அந்த வாக்கெடுப்பின் முடிவு வெளியிடப்பட்டது. இதில் இந்திய கனவு அணிக்கு டோனி கேப்டன் மற்றும் விக்கெட் கிப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தொடக்க வீரர்களாக சுனில் கவாஸ்கர், விரேந்திர சேவாக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கவாஸ்கருக்கு 68% வாக்குகளும், சேவாக்கிற்கு 86% வாக்குகளும் விழுந்தன.
3-ம் நிலையில் களமிறங்க ஏறத்தாழ ஏகமனதாக ராகுல் டிராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 96% வாக்குகள் கிடைத்தது. 4-ம் நிலையில் சச்சின் டெண்டுல்கர் 68% வாக்குகள் பெற்றார்.
லஷ்மண் 5-ம் நிலைக்காக 58% வாக்குகள் பெற்றார். இவருக்கும் கங்குலிக்கும் கடும் போட்டி நிலவினாலும் கங்குலி 38% வாக்குகளையே பெற்றார்.
அடுத்ததாக ஆல்ரவுண்டர் நிலைக்கு கபில்தேவ் 91% வாக்குகளுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அடுத்தபடியாக 90% வாக்குகளுடன் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் டோனி திகழ்கிறார். நம்பர் 8-ற்கு அஸ்வின் 53% வாக்குகள் பெற்றார். 92% வாக்குகளுடன் அனில் கும்ப்ளே 9-ம் இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த இடத்திற்கான தேர்வில் ஜவகல் ஸ்ரீநாத் 78% வாக்குகள் பெற்றார்.
ஸ்ரீநாத்துக்கு அடுத்தபடியாக ஜாகீர்கான் 83% வாக்குகள் பெற்றார்.
12-வது நபருக்கான தேர்வில் ரசிகர்கள் யுவராஜ் சிங்கிற்கு 62% வாக்குகள் அளித்தனர்.
ரசிகர்களின் கனவு அணி: சுனில் கவாஸ்கர், சேவாக், ராகுல் திராவிட், சச்சின், லஷ்மண், கபில்தேவ், டோனி, அஸ்வின், கும்ப்ளே, ஸ்ரீநாத், ஜாகீர்கான், யுவராஜ் சிங் (12-வது வீரர்).
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X