search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில கூடைப்பந்து இறுதிப்போட்டி: ஐ.ஓ.பி.- இந்தியன் வங்கி இன்று பலப்பரீட்சை
    X

    மாநில கூடைப்பந்து இறுதிப்போட்டி: ஐ.ஓ.பி.- இந்தியன் வங்கி இன்று பலப்பரீட்சை

    14-வது மாநில கூடைப்பந்து இறுதிப்போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஐ.ஓ.பி.- இந்தியன் வங்கி இன்று மோதுகின்றன
    சென்னை:

    மேயர் ராதாகிருஷ்ணன் கூடைப்பந்து கிளப் சார்பில் பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி ஆதரவுடன் 14-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் பிரிவில் நேற்று அரை இறுதி ஆட்டங்கள் நடந்தது. ஒரு ஆட்டத்தில் ஐ.ஓ.பி.- ஐ.சி.எப். அணிகள் மோதின. இதில் ஐ.ஓ.பி. 79-57 என்ற புள்ளிக் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    மற்றொரு அரை இறுதியில் இந்தியன் வங்கி 72-61 என்ற கணக்கில் ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அணியை விழ்த்தியது.

    இன்று மாலை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஐ.ஓ.பி.- இந்தியன் வங்கி அணிகள் மோதுகின்றன.

    பெண்கள் பிரிவில் நடந்த ‘லீக்‘ ஆட்டங்களில் ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அணி 78-18 என்ற கணக்கில் சிலம்பர்ஸ் கிளப்பையும், மெட்ராஸ் நேசனல் கிளப் 48-31 என்ற கணக்கில் வாய்தூத் கிளப்பையும் தோற்கடித்தன.

    இன்று நடைபெறும் கடைசி ‘லீக்‘ ஆட்டங்களில் ஜேப்பியார் இன்ஸ்டிடியூட்- நேசனல் கிளப் அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி சாம்பியன் பட்டம் பெறும். இரு அணிகளும் தலா 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தன.
    Next Story
    ×