search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி அணிகளுக்கான வீரர்கள் ஒதுக்கீடு சென்னையில் இன்று நடக்கிறது
    X

    பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி அணிகளுக்கான வீரர்கள் ஒதுக்கீடு சென்னையில் இன்று நடக்கிறது

    தமிழ்நாடு பிரிமீயர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளுக்கான வீரர்கள் ஒதுக்கீடு நிகழ்ச்சி சென்னை அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கி நடக்கிறது.
    சென்னை :

    முதலாவது தமிழ்நாடு பிரிமீயர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளுக்கான வீரர்கள் ஒதுக்கீடு நிகழ்ச்சி சென்னை அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது.

    இதில் 8 அணிகளின் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது அணிக்கான வீரர்களை தேர்வு செய்கிறார்கள். இந்த போட்டியில் விளையாட விரும்பம் தெரிவித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்துள்ள வீரர்களில் இருந்து 888 பேர் கொண்ட இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்த பட்டியலில் இருந்து வீரர்கள் அணிக்கு ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். ஒரு அணி 17 முதல் 19 வீரர்களை தேர்வு செய்யலாம். வீரர்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

    இந்திய சீனியர் அணிக்காக விளையாடிய வீரர்களுக்கு ரூ.5 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.3 லட்சம் எனவும், இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திய போட்டியில் கலந்து கொண்ட வீரர்களுக்கு ரூ.2½ லட்சம், ரூ.2 லட்சம், ரூ.1½ லட்சம் எனவும், மற்ற வீரர்களுக்கு ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×