என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகத்தான வெற்றி: கும்ப்ளே, கோலி, அஸ்வினுக்கு வாழ்த்துக்கள் கூறிய சச்சின்
Byமாலை மலர்25 July 2016 5:30 PM GMT (Updated: 25 July 2016 5:30 PM GMT)
ஆன்டிகுவாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்கு சச்சின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆன்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்தியா முன்னிலைப் பெற்றுள்ளது.
முதலில் பேட்டிங் செய்து இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 566 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. விராட் கோலி இரட்டை சதமும் (200), அஸ்வின் சதமும் (113) அடித்தனர். முதல் இன்னிங்சில் உமேஷ் யாதவ் மற்றும் மொகமது சமி ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி 243 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 231 ரன்னில் சுருண்டது. முதல் இன்னிங்சில் விக்கெட் எடுக்காமல் ஏமாற்றம் அடைந்த அஸ்வின், 2-வது இன்னிங்சில் 83 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
இந்த டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது பலருக்கு பெருமை சேர்த்துள்ளது. விராட் கோலிக்கு முதல் சதம், பயிற்சியாளர் கும்ப்ளேவிற்கு முதல் வெற்றி, அன்னிய மண்ணில் இந்திய அணிக்கு அதிக வித்தியாசத்தில் வெற்றி, அஸ்வின் அன்னிய மண்ணில் முதன்முறையாக 5 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியது என சாதனைப் படைத்தனர்.
இந்த சாதனைகளை படைத்த மூன்று பேருக்கும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘சிறப்பான வெற்றியை பெற்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அஸ்வின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது. அதேபோல் அனில் கும்ப்ளேவிற்கு அறிமுக டெஸ்ட் நல்லபடியாக அமைந்தது. இது நீடிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
முதலில் பேட்டிங் செய்து இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 566 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. விராட் கோலி இரட்டை சதமும் (200), அஸ்வின் சதமும் (113) அடித்தனர். முதல் இன்னிங்சில் உமேஷ் யாதவ் மற்றும் மொகமது சமி ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி 243 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 231 ரன்னில் சுருண்டது. முதல் இன்னிங்சில் விக்கெட் எடுக்காமல் ஏமாற்றம் அடைந்த அஸ்வின், 2-வது இன்னிங்சில் 83 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
இந்த டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது பலருக்கு பெருமை சேர்த்துள்ளது. விராட் கோலிக்கு முதல் சதம், பயிற்சியாளர் கும்ப்ளேவிற்கு முதல் வெற்றி, அன்னிய மண்ணில் இந்திய அணிக்கு அதிக வித்தியாசத்தில் வெற்றி, அஸ்வின் அன்னிய மண்ணில் முதன்முறையாக 5 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியது என சாதனைப் படைத்தனர்.
இந்த சாதனைகளை படைத்த மூன்று பேருக்கும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘சிறப்பான வெற்றியை பெற்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அஸ்வின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது. அதேபோல் அனில் கும்ப்ளேவிற்கு அறிமுக டெஸ்ட் நல்லபடியாக அமைந்தது. இது நீடிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X