search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புவனேஷ்வர் குமார் ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்: டேவிட் வார்னர்
    X

    புவனேஷ்வர் குமார் ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்: டேவிட் வார்னர்

    புவனேஷ்வர் குமார் ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் என்று டேவிட் வார்னர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
    பெங்களூர்: 

    நேற்று நடைப்பெற்ற ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் ஐதராபாத் அணி, பெங்களூர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் பிறகு ஐதராபாத் அணிக் கேப்டன் டேவிட் வார்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

    புவனேஷ்வர் குமார் இந்திய அணியில் வருவதும் போவதுமாக இருக்கிறார் என்றாலும் கூட அவர் ஒரு உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்.

    என் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு பாத்திரமானவர் புவனேஷ்வர் குமார். கிரிக்கெட் விளையாட்டு மீது அவருக்கு இருக்கும் காதல் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. மிக நேர்த்தியாக, லட்சியத்துடன் அவர் கிரிக்கெட்டை ஆடுகிறார். போட்டியை அணு அணுவாக ரசிக்கிறார். அவர் மீது எனக்கு எப்போதுமே நிறைய நம்பிக்கை உண்டு. இறுதிக்கட்ட ஓவர்களில் நான் அவரை நம்பியே இருந்தேன்.

    ஒரு தொடக்க ஆட்டக்காரராக, அவருக்கு எதிராக ஆட வேண்டும். ஆஸ்திரேலிய அணியின் சார்பில் புவனேஷ்வர் குமாருக்கு எதிராக களம் இறங்க ஆர்வமாக இருக்கிறேன்.

    அதேபோல வங்காளதேசத்தைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரஹ்மான், ஒரு அபாரமான பந்து வீச்சாளர். எதிர்காலத்தில் அவர் பல சாதனைகளைப் படைப்பார் என நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×