என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூ.487 கோடி நிலக்கரி இறக்குமதி ஊழல்: சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது
Byமாலை மலர்23 Jan 2018 9:33 AM GMT (Updated: 23 Jan 2018 9:33 AM GMT)
இந்தோனேசியா நாட்டில் இருந்து மட்டமான நிலக்கரியை இறக்குமதி செய்து தேசிய அனல் மின்நிலையத்துக்கு வினியோகித்த வகையில் நடந்த 487 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது.
புதுடெல்லி:
மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய அனல் மின்சார உற்பத்தி நிலையம் மற்றும் சில மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு இந்தோனேசியா நாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்து வினியோகித்த வகையில் கடந்த 2011-12 மற்றும் 2014-15 ஆண்டுகளுக்கு இடையில் ஏகப்பட்ட நிதி முறைகேடு நடைபெற்றதாக மத்திய வருவாய்துறை புலனாய்வு அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதுதொடர்பாக நடந்த விசாரணையில் தரக்குறைவான நிலக்கரியை இறக்குமதி செய்து தரத்தில் சிறந்ததாக கணக்கு காட்டி, போலி ரசீதுகள் தயாரித்து அரசுக்கு 487 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஊழல் தொடர்பாக கோஸ்ட்டல் எனர்ஜி பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் பிரதிநிதி ஏ.ஆர்.புஹாரி, சன்னி, மற்றும் தேசிய அனல் மின்சார உற்பத்தி நிறுவனம், மெட்டல்ஸ் அன்ட் மினரல்ஸ் கார்ப்பரேஷன், ஆரவள்ளி பவர் கம்பெனி ஆகிய நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள்மீது சி.பி.ஐ. அதிகாரிகள் கிரிமினல் சதி, மோசடி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்த நிலக்கரி ஊழல் தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கியுள்ளதாக சி.பி.ஐ. இன்று தெரிவித்துள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X