என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தமாக பேசியதை கண்டித்த சிறுமியை தாக்கிய இளைஞர் - வைரலாகும் வீடியோ
Byமாலை மலர்21 Oct 2017 11:45 AM GMT (Updated: 21 Oct 2017 11:45 AM GMT)
மும்பையில் உள்ள தனியார் குடியிருப்பில் சத்தமாக பேசியதை கண்டித்த சிறுமியை மயக்கம் வரும் வரை இளைஞர் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் தலைநகரான மும்பையில் உள்ள நேக்ரு நகரில் கடந்த செவ்வாய் கிழமை சிறுமி ஒருவர் தனது தோழியுடன் தையல் வகுப்பிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த இம்ரான் ஷாகித் ஷேக் என்பவர் தனது நண்பர்களுடன் சத்தமாக பேசிக்கொண்டிருந்தார்.
அவரை மெதுவாக பேசும் படி சிறுமி கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த இம்ரான் அச்சிறுமியை வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். ஆனால் அதனை அருகில் இருந்த மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். யாரும் உதவி செய்யவில்லை.
சிறுமியின் உடனிருந்த தோழி அவரின் பெற்றொருக்கு தகவல் அளித்துள்ளார். அவர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இம்ரானை கைது செய்தனர். ஆனால் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இளைஞர் சிறுமியை தாக்கியது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் தலைநகரான மும்பையில் உள்ள நேக்ரு நகரில் கடந்த செவ்வாய் கிழமை சிறுமி ஒருவர் தனது தோழியுடன் தையல் வகுப்பிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த இம்ரான் ஷாகித் ஷேக் என்பவர் தனது நண்பர்களுடன் சத்தமாக பேசிக்கொண்டிருந்தார்.
அவரை மெதுவாக பேசும் படி சிறுமி கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த இம்ரான் அச்சிறுமியை வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். ஆனால் அதனை அருகில் இருந்த மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். யாரும் உதவி செய்யவில்லை.
சிறுமியின் உடனிருந்த தோழி அவரின் பெற்றொருக்கு தகவல் அளித்துள்ளார். அவர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இம்ரானை கைது செய்தனர். ஆனால் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இளைஞர் சிறுமியை தாக்கியது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X