search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரிதா நாயர் கணவர் ராதாகிருஷ்ணன்.
    X
    சரிதா நாயர் கணவர் ராதாகிருஷ்ணன்.

    சோலார் பேனல் உரிமையாளர் நடிகர் கணேஷ்குமார் தான்: சரிதா நாயர் கணவர் அறிக்கை

    சோலார் பேனல் உண்மையான உரிமைதாரர் முன்னாள் நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கணேஷ்குமார் தான் என்று சரிதா நாயரின் கணவர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    கொழிஞ்சாம்பாறை:

    கோவை வடவள்ளி, கேரள உள்ளிட்ட பகுதிகளில் சோலார் பேனல் விற்பனையில் ஈடுபட்டவர் சரிதா நாயர். சோலார் பேனல் வழக்கில் கோடிக்கணக்கில் பணம் மற்றும் பல்வேறு முறைகேடு, சலுகைகள் பெற்றதாக சரிதா நாயர் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து அவர் மீது கோவை மற்றும் கேரளாவில் வழக்கு நடந்து வருகிறது.

    இந்நிலையில் சரிதா நாயர் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மீது பாலியல் தொந்தரவு மற்றும் புகார்களை தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு கோவை மற்றும் கேரளாவில் நடந்து வருகிறது.

    நேற்று முன்தினம் கேரள சட்டசபையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, மற்றும் சில காங்கிரஸ் தலைவர்கள் மீது சோலார் பேனல் மற்றும் சரிதா நாயர் விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சம்பவம் கேரள அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது. இதனையடுத்து ராகுல் காந்தி கேரள காங்கிரஸ் தலைவர்களிடம் விசாரணை நடத்தினார்.

    இந்நிலையில் சரிதா நாயரின் கணவர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சோலார் பேனல் உண்மையான உரிமைதாரர் முன்னாள் நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கணேஷ்குமார் தான். எனது மனைவி பினாமி மட்டுமே. எனது மனைவியிடம் சோலார் பேனல் நடத்தி அதிக லாபம் பெற வேண்டும். அதற்கு நீ சில முக்கிய அரசியல்வாதிகளை திருப்திபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். எனவே அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.



    Next Story
    ×