search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகார்: பள்ளி தேர்வு வினாத்தாளில் காஷ்மீர் தனி நாடு என தவறான தகவல்
    X

    பீகார்: பள்ளி தேர்வு வினாத்தாளில் காஷ்மீர் தனி நாடு என தவறான தகவல்

    பீகார் மாநிலத்தில் அரசு பள்ளி வினாத்தாளில் காஷ்மீர் தனி நாடு என தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் அரையிறுதி தேர்வுகள் அக்டோபர் 5-ம் தேதி தொடங்கியது. 7 வகுப்பிற்கான தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வியில் காஷ்மீர் தனி நாடு என குறிப்பிடப்பட்டுள்ளது.

    கீழ்க்கண்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை எவ்வாறு அழைப்பார்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதில் சீனா, நேபாளம், இங்கிலாந்து மற்றும் இந்தியாவின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அந்த வரிசையில் காஷ்மீரின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

    இது காஷ்மீர் தனி நாடு என குறிப்பிடுவதாக இருந்தது. அதற்கு பீகார் கல்வி அதிகாரிகள் பதில் தெரிவித்துள்ளனர்.

    வினாத்தாள் அச்சடிக்கும் போது தவறு ஏற்பட்டுள்ளது. நாடுகள்/மாநிலங்கள் என்ற அச்சிட வேண்டிய இடத்தில் நாடுகள் மட்டுமே உள்ளது. மாநிலங்கள் என்ற வார்த்தை விடுபட்டு உள்ளது என தெரிவித்தனர்.
    Next Story
    ×