என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியானாவில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை - புளூ வேல் விளையாட்டு காரணமா?
Byமாலை மலர்25 Sep 2017 10:31 AM GMT (Updated: 25 Sep 2017 10:31 AM GMT)
அரியானா மாநிலம் பஞ்சகுலாவில் 17 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு புளூ வேல் விளையாட்டு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சண்டிகர்:
அரியானா மாநிலம் பஞ்சகுலா மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது வாலிபர் சண்டிகரில் உள்ள பள்ளியில் பயின்று வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வாலிபர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை குறித்த காரணம் பற்றி தெரியவில்லை.
இன்று வாலிபரின் பெற்றோர்கள் தன் மகன் டைரியில் படங்கள் மற்றும் குறிப்புகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதை பார்க்கும்போது மாணவன் புளூ வேல் விளையாட்டினால் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் வந்துள்ளது. உடனே போலீசிற்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, மாணவன் புளூ வேல் விளையாட்டால் மரணமடைந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், மாணவனின் கையில் புளூ வேல் படம் வரையப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரியானா மாநிலம் பஞ்சகுலா மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது வாலிபர் சண்டிகரில் உள்ள பள்ளியில் பயின்று வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வாலிபர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை குறித்த காரணம் பற்றி தெரியவில்லை.
இன்று வாலிபரின் பெற்றோர்கள் தன் மகன் டைரியில் படங்கள் மற்றும் குறிப்புகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதை பார்க்கும்போது மாணவன் புளூ வேல் விளையாட்டினால் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் வந்துள்ளது. உடனே போலீசிற்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, மாணவன் புளூ வேல் விளையாட்டால் மரணமடைந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், மாணவனின் கையில் புளூ வேல் படம் வரையப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X