search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகாரில் இரண்டு ராணுவ வீரர்கள் ஒருவரையொருவர் சுட்டுக்கொலை
    X

    பீகாரில் இரண்டு ராணுவ வீரர்கள் ஒருவரையொருவர் சுட்டுக்கொலை

    பீகார் மாநிலம் தலைநகரான பாட்னாவில் ராணுவ வீரர்கள் இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டு பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பாட்னா:

    பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள தன்பூர் நகரில் ராணுவ குடியிருப்பு அமைந்துள்ளது. இப்பகுதியில் ராணுவ வீரர்கள் அதிகமானோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று காலை இந்நகரில் உள்ள வீட்டில் இரண்டு ராணுவ வீரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் இருவரும் கைக்கலப்பில் ஈடுபட்டனர். சண்டை அதிகமாகவே இருவரும் கோபத்தில் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஒருவரையொருவர் சுட்டனர்.

    இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×