என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரபல எழுத்தாளர் அருன் சாது உடல்நலக்குறைவால் காலமானார்
Byமாலை மலர்25 Sep 2017 2:10 AM GMT (Updated: 25 Sep 2017 2:10 AM GMT)
பத்திரிக்கையாளராகவும், பிரபல எழுத்தாளராகவும் திகழ்ந்த அருன் சாது (76) இதயநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார்.
மும்பை:
கடந்த 1942-ம் ஆண்டில் பிறந்த அருன் சாது பல்வேறு ஆங்கில பத்திரிக்கைகளில் பணியாற்றியவர். புனே பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில் பேராசிரியராகவும் திறம்பட செயல்பட்டவர். இந்தி, மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் பல்வேறு புத்தகங்களை அருன் சாது எழுதியுள்ளார்.
குறிப்பாக சிவசேனா கட்சியின் எழுச்சி, சீன புரட்சி, வியட்நாம் போர் போன்ற புத்தகங்கள் இன்றளவும் பிரபலமாக பேசப்படுகின்றன. பாரதிய பாஷா பரிஷாத், கேல்கர் மற்றும் ஆச்சார்யா அட்ரே ஆகிய விருதுகளையும் அருன் சாது பெற்றுள்ளார்.
அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட சில திரைப்படங்களில் கதாசிரியராகவும் அருன் சாது தனது திறமையை வெளிக்காட்டியவர். இந்நிலையில், இதயநோய் காரணமாக நேற்று காலை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார்.
கடந்த 1942-ம் ஆண்டில் பிறந்த அருன் சாது பல்வேறு ஆங்கில பத்திரிக்கைகளில் பணியாற்றியவர். புனே பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில் பேராசிரியராகவும் திறம்பட செயல்பட்டவர். இந்தி, மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் பல்வேறு புத்தகங்களை அருன் சாது எழுதியுள்ளார்.
குறிப்பாக சிவசேனா கட்சியின் எழுச்சி, சீன புரட்சி, வியட்நாம் போர் போன்ற புத்தகங்கள் இன்றளவும் பிரபலமாக பேசப்படுகின்றன. பாரதிய பாஷா பரிஷாத், கேல்கர் மற்றும் ஆச்சார்யா அட்ரே ஆகிய விருதுகளையும் அருன் சாது பெற்றுள்ளார்.
அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட சில திரைப்படங்களில் கதாசிரியராகவும் அருன் சாது தனது திறமையை வெளிக்காட்டியவர். இந்நிலையில், இதயநோய் காரணமாக நேற்று காலை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X