என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கின்னஸ் சாதனை படைக்கும் 101 அடி துர்கை அம்மன் மூங்கில் சிலை
Byமாலை மலர்23 Sep 2017 11:21 AM GMT (Updated: 23 Sep 2017 11:21 AM GMT)
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நவராத்திரி பூஜையை ஒட்டி செய்யப்பட்ட 101 அடி துர்கை அம்மன் சிலை உலகிலேயே மிகப்பெரிய மூங்கில் சிலை என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற உள்ளது.
திஸ்பூர்:
அசாம் மாநிலத்தில் துர்கா பூஜை விழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடக்கும் இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
அம்மாநிலத்தின் கவுகாத்தி நகரில் துர்கா பூஜைக்காக 101 அடியில் துர்கை அம்மன் சிலை மூங்கிலால் செய்யப்பட்டுள்ளது. அதனை புகழ்பெற்ற கலை இயக்குனர் நுரூதின் அக்மத் தலைமையிலான 44 கலைஞர்கள் கொண்ட குழு வடிவமைத்தது. ஆரம்பத்தில் 110 அடி உயரத்தில் செய்ய திட்டமிடப்பட்டு, ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால் இடையில் ஏற்பட்ட கடுமையான புயலால் சிலைக்கு சேதம் ஏற்பட்டது. பாதி வேலைப்பாடுகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் அதனை ஆரம்பத்தில் இருந்து வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சிலை உலகிலேயே மிக உயரமான மூங்கில் சிலை என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற உள்ளது.
தற்சமயம் இந்த 101 அடி சிலை பூஜைக்காக நிறுவப்பட்டுள்ளது. வருகின்ற 27-ம் தேதி நான்கு நாள் பூஜை தொடங்கும் என கூறியுள்ளனர்.
அசாம் மாநிலத்தில் துர்கா பூஜை விழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடக்கும் இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
அம்மாநிலத்தின் கவுகாத்தி நகரில் துர்கா பூஜைக்காக 101 அடியில் துர்கை அம்மன் சிலை மூங்கிலால் செய்யப்பட்டுள்ளது. அதனை புகழ்பெற்ற கலை இயக்குனர் நுரூதின் அக்மத் தலைமையிலான 44 கலைஞர்கள் கொண்ட குழு வடிவமைத்தது. ஆரம்பத்தில் 110 அடி உயரத்தில் செய்ய திட்டமிடப்பட்டு, ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால் இடையில் ஏற்பட்ட கடுமையான புயலால் சிலைக்கு சேதம் ஏற்பட்டது. பாதி வேலைப்பாடுகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் அதனை ஆரம்பத்தில் இருந்து வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சிலை உலகிலேயே மிக உயரமான மூங்கில் சிலை என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற உள்ளது.
தற்சமயம் இந்த 101 அடி சிலை பூஜைக்காக நிறுவப்பட்டுள்ளது. வருகின்ற 27-ம் தேதி நான்கு நாள் பூஜை தொடங்கும் என கூறியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X