என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளிகள் பலி
Byமாலை மலர்18 Sep 2017 12:45 PM GMT (Updated: 18 Sep 2017 12:45 PM GMT)
குஜராத் மாநிலத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் போது வெளிவந்த விஷவாயு தாக்கி 4 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காந்தி நகர்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது.
இதில் தொட்டிக்குள் சுத்தம் செய்துகொண்டிருந்த சில தொழிலாளிகள் மயக்கம் அடைந்தனர். அவர்களை காப்பாற்ற சென்றவர்களையும் விஷவாயு தாக்கியது. மயக்கமடைந்தவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேரின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த தொழிற்சாலை சாயங்கள் போன்ற வேதிப்பொருள்கள் தாயாரித்து வந்துள்ளது. பராமரிப்பு பணிக்காக வேலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயத்தில், விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது.
இதில் தொட்டிக்குள் சுத்தம் செய்துகொண்டிருந்த சில தொழிலாளிகள் மயக்கம் அடைந்தனர். அவர்களை காப்பாற்ற சென்றவர்களையும் விஷவாயு தாக்கியது. மயக்கமடைந்தவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேரின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த தொழிற்சாலை சாயங்கள் போன்ற வேதிப்பொருள்கள் தாயாரித்து வந்துள்ளது. பராமரிப்பு பணிக்காக வேலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயத்தில், விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X