search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளிகள் பலி

    குஜராத் மாநிலத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் போது வெளிவந்த விஷவாயு தாக்கி 4 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    காந்தி நகர்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

    இதில் தொட்டிக்குள் சுத்தம் செய்துகொண்டிருந்த சில தொழிலாளிகள் மயக்கம் அடைந்தனர். அவர்களை காப்பாற்ற சென்றவர்களையும் விஷவாயு தாக்கியது. மயக்கமடைந்தவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேரின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்த தொழிற்சாலை சாயங்கள் போன்ற வேதிப்பொருள்கள் தாயாரித்து வந்துள்ளது. பராமரிப்பு பணிக்காக வேலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயத்தில், விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×