search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திரிபுரா முதல்-மந்திரியை கொன்றால் ரூ.5 லட்சம் பரிசு: பேஸ்புக்கில் மிரட்டல்
    X

    திரிபுரா முதல்-மந்திரியை கொன்றால் ரூ.5 லட்சம் பரிசு: பேஸ்புக்கில் மிரட்டல்

    ‘திரிபுரா முதல் மந்திரி மாணிக் சர்க்காரை கொல்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்’ என பேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
    அகர்தலா:

    திரிபுரா மாநில முதல்-மந்திரியாக இருந்து வருபவர் மாணிக் சர்க்கார். இவருக்கு இன்று காலை பேஸ்புக்கில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அகர்தலா போலீசார் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், “முதல்-மந்திரி மாணிக் சர்க்காரை கொல்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என உலக ஆன்டி கம்யூனிஸ்ட் கவுன்சில் என்ற அமைப்பின் பெயரில் ரியா ராய் என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

    விசாரணையில், அது போலி பெயரில் உருவாக்கப்பட்ட பேஸ்புக் அக்கவுன்ட் என்பது தெரியவந்தது. முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆசாமியை தேடி வருகிறோம்’’ என தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×