என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி வீட்டுக்கு சென்ற பிரிவினைவாத தலைவர் கைது
Byமாலை மலர்29 May 2017 7:49 AM GMT (Updated: 29 May 2017 7:49 AM GMT)
காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி வீட்டுக்கு சென்ற பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே அங்கு ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சப்ஸார் அகமது பட்டை பாதுகாப்பு படையினர் சமீபத்தில் சுட்டுக் கொன்றனர். இதற்கு பிரிவினைவாத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 2 நாட்கள் முழு அடைப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சுட்டு கொல்லப்பட்ட பட்டின் வீட்டுக்கு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.
இதைத்தொடர்ந்து யாசின் மாலிக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 5 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து யாசின் மாலிக்கை ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே அங்கு ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சப்ஸார் அகமது பட்டை பாதுகாப்பு படையினர் சமீபத்தில் சுட்டுக் கொன்றனர். இதற்கு பிரிவினைவாத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 2 நாட்கள் முழு அடைப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சுட்டு கொல்லப்பட்ட பட்டின் வீட்டுக்கு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.
இதைத்தொடர்ந்து யாசின் மாலிக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 5 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து யாசின் மாலிக்கை ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X