என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பங்கு சந்தையில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி முதலீட்டை அதிகரிக்க முடிவு: மத்திய மந்திரி தகவல்
Byமாலை மலர்28 May 2017 8:17 PM GMT (Updated: 28 May 2017 8:17 PM GMT)
ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் பங்கு சந்தையில் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.
ஐதராபாத்:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது (இ.பி.எப்.ஓ.), பங்கு சந்தையில் முதலீடு செய்து வருகிறது. அதன்படி கடந்த 2015-16-ம் நிதியாண்டில் ரூ.6,577 கோடியும், 2016-17-ம் நிதியாண்டில் ரூ.14,982 கோடியும் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தத்தில் கடந்த மாதம் வரை ரூ.22,858 கோடி முதலீடு செய்யப்பட்டு, 13.72 சதவீத வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.
இந்த முதலீட்டை நடப்பு நிதியாண்டில் மேலும் அதிகரிக்க இ.பி.எப்.ஓ. முடிவு செய்துள்ளது. குறிப்பாக இந்த நிதியாண்டில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் பங்கு சந்தையில் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார். இதற்கான முடிவை மத்திய அறங்காவலர் குழு எடுத்து இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதன் மூலம் முதலீட்டுத்தொகை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படுவதாக கூறிய தத்தாத்ரேயா, இது தொடர்பான அறிவிப்பை தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் விரைவில் வெளியிடும் எனவும் தெரிவித்தார்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது (இ.பி.எப்.ஓ.), பங்கு சந்தையில் முதலீடு செய்து வருகிறது. அதன்படி கடந்த 2015-16-ம் நிதியாண்டில் ரூ.6,577 கோடியும், 2016-17-ம் நிதியாண்டில் ரூ.14,982 கோடியும் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தத்தில் கடந்த மாதம் வரை ரூ.22,858 கோடி முதலீடு செய்யப்பட்டு, 13.72 சதவீத வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.
இந்த முதலீட்டை நடப்பு நிதியாண்டில் மேலும் அதிகரிக்க இ.பி.எப்.ஓ. முடிவு செய்துள்ளது. குறிப்பாக இந்த நிதியாண்டில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் பங்கு சந்தையில் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார். இதற்கான முடிவை மத்திய அறங்காவலர் குழு எடுத்து இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதன் மூலம் முதலீட்டுத்தொகை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படுவதாக கூறிய தத்தாத்ரேயா, இது தொடர்பான அறிவிப்பை தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் விரைவில் வெளியிடும் எனவும் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X