search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் திட்டவட்டம்
    X

    எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் திட்டவட்டம்

    டெல்லி மாநகராட்சி தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், தங்களது பொறுப்புகளில் நீடிக்குமாறு கூறிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் வலியுறுத்தலை பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் நிராகரித்துவிட்டனர்.
    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி மாநகராட்சித் தேர்தலில் 3 நகராட்சிகளையும் பா.ஜ.க. கைப்பற்றியது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. அதனால் காங்கிரஸ் கட்சியும் பெரும் பின்னடைவை சந்தித்தது.

    மொத்தமுள்ள 270 இடங்களில் 181-ஐ பா.ஜ.க. கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 48 இடங்களில் வெற்றி  பெற்று இடண்டாவது இடத்தையும், காங்கிரஸ் கட்சி 29 இடங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

    காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று அக்கட்சியின் டெல்லி மாநில தலைவர்கள் பி.சி.சாக்கோ மற்றும் அஜய் மக்கான் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.

    இதனையடுத்து, தங்களது பதவியில் நீடிக்குமாறு பி.சி.சாக்கோ மற்றும் அஜய் மக்கானுக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

    இந்நிலையில், ராகுல்காந்தியின் கோரிக்கையை பி.சி.சாக்கோ மற்றும் அஜய் மக்கான் இருவரும் நிராகித்து விட்டனர்.
    Next Story
    ×