search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடப்பாவில் ரெயில் நிலையத்தில் மாணவர் எரித்து கொலை: தமிழக வாலிபரை போலீஸ் தேடுகிறது
    X

    கடப்பாவில் ரெயில் நிலையத்தில் மாணவர் எரித்து கொலை: தமிழக வாலிபரை போலீஸ் தேடுகிறது

    கடப்பாவில் ரெயில் கதவு ஓரம் நிற்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தமிழக வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    நகரி:

    கடப்பா அடுத்த புனே வாலி பள்ளத்தை சேர்ந்தவர் நவீன்குமார் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் கடப்பா ரெயில் நிலையத்தில் மும்பை- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி ஊருக்கு சென்றார். அப்போது அவருக்கும் தமிழக வாலிபர் ஒருவருக்கும் ரெயில் கதவு ஓரம் நிற்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

    ராஜம்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் வந்த போது நவீன்குமார் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு தமிழக வாலிபர் ஓடிவிட்டார். தீயில் கருகிய நவீன்குமாரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். ரெயிலில் சென்ற தமிழக வாலிபரிடம் எப்படி பெட்ரோல் இருந்தது என்பது தெரியவில்லை. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×