என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓடுதளத்தில் விமானத்தின் டயர் வெடித்து விபத்து - 125 பயணிகள் உயிர் பிழைத்தனர்
Byமாலை மலர்25 April 2017 11:16 AM GMT (Updated: 25 April 2017 11:16 AM GMT)
கேரளாவில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட விமானம், ஓடுதளத்தில் சென்றபோது டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த 125 பயணிகளும் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருவனந்தபுரம்:
கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் 125 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் காலை 11.30 மணிக்கு புறப்பட்டது. மேலே எழுவதற்காக இந்த விமானம் ஓடுதளத்தில் ஓட தொடங்கியது.
இந்த நிலையில் அந்த விமானத்தின் டயர் ஒன்று பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்தது. டயர் வெடித்ததை அறிந்த விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தினார். பின்னர் பயணிகள் அவசர அவசரமாக இறக்கப்பட்டனர். விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
விமானத்தில் பயணம் செய்த 125 பயணிகளும் பத்திரமாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். சம்பவத்தை தொடர்ந்து கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து மற்ற விமானங்கள் புறப்படுவது தாமதமானது. மாற்று டயர் பொருத்தப்பட்ட பின்னர் ஏர் இந்தியா விமானம் மீண்டும் மாலையில் துபாய் புறப்பட்டு சென்றது.
கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் 125 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் காலை 11.30 மணிக்கு புறப்பட்டது. மேலே எழுவதற்காக இந்த விமானம் ஓடுதளத்தில் ஓட தொடங்கியது.
இந்த நிலையில் அந்த விமானத்தின் டயர் ஒன்று பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்தது. டயர் வெடித்ததை அறிந்த விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தினார். பின்னர் பயணிகள் அவசர அவசரமாக இறக்கப்பட்டனர். விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
விமானத்தில் பயணம் செய்த 125 பயணிகளும் பத்திரமாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். சம்பவத்தை தொடர்ந்து கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து மற்ற விமானங்கள் புறப்படுவது தாமதமானது. மாற்று டயர் பொருத்தப்பட்ட பின்னர் ஏர் இந்தியா விமானம் மீண்டும் மாலையில் துபாய் புறப்பட்டு சென்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X