search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டை இலை சின்னம் வழக்கு: இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் போலீஸ் காவல் நீட்டிப்பு
    X

    இரட்டை இலை சின்னம் வழக்கு: இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் போலீஸ் காவல் நீட்டிப்பு

    இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதற்காக, தினகரனிடம் பேரம் பேசி பணம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க. அம்மா அணிக்கு பெற்றுத் தருவதற்காக, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் தர பேரத்தில் ஈடுபட்டதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடந்த 16-ந்தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவரை 8 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியிருந்தது.



    அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் கடந்த மூன்று நாட்களாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.



    இதற்கிடையே, சுகேஷ் சந்திரசேகரின் போலீஸ் காவல் இன்று முடிவடைந்தது. இதையடுத்து சுகேஷ் சந்திரசேகரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, மேலும் விசாரணை நடத்தி பல தகவல்களை பெற வேண்டியிருப்பதால் சுகேசின் போலீஸ் காவலை நீட்டிக்கும்படி போலீஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    அதனை ஏற்ற நீதிமன்றம், சுகேஷ் சந்திரசேகரின் போலீஸ் காவலை வரும் 28-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. தினகரன்-சுகேஷ் இடையிலான தொலைபேசி அழைப்பு விவரங்கள் குறித்த ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.




    Next Story
    ×