என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உணவகங்களில் சேவை கட்டணம் செலுத்துவது கட்டாயம் அல்ல: மத்திய அரசு
Byமாலை மலர்22 April 2017 12:02 AM GMT (Updated: 22 April 2017 12:02 AM GMT)
உணவகங்களில் சேவை கட்டணம் செலுத்துவது கட்டாயம் அல்ல என்று புதிய விதிமுறைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:
உணவகங்களில் உணவு தொகையுடன் சேவை கட்டணம் என்ற பெயரில் 5 சதவீதம் முதல் 20 சதவீதம்வரை வசூலிக்கப்படுகிறது. இதுபற்றி வாடிக்கையாளர்கள் புகார் அளித்ததன்பேரில், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு உருவாக்கியது. அவற்றுக்கு நேற்று ஒப்புதல் அளித்தது.
அதன்படி, சேவை கட்டணம் செலுத்துவது கட்டாயம் அல்ல, அது வாடிக்கையாளரின் விருப்பத்தை பொறுத்தது ஆகும்.
இதுபற்றி மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாவது:-
சேவை கட்டணத்தை உணவகங்கள் தீர்மானிக்கக்கூடாது. அதை வாடிக்கையாளரின் விருப்பத்துக்கு விட்டுவிட வேண்டும். ரசீதில், சேவை கட்டணம் என்ற பகுதியை காலியாக விட வேண்டும். வாடிக்கையாளர் விருப்பப்பட்டால், அதை பூர்த்தி செய்து, மொத்த பில் தொகையை செலுத்தலாம். ஒருவேளை, சேவை கட்டணத்தை கட்டாயமாக வசூலித்தால், நுகர்வோர் கோர்ட்டில் வாடிக்கையாளர்கள் புகார் செய்யலாம். இந்த நெறிமுறைகள், மாநில அரசுகளின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
உணவகங்களில் உணவு தொகையுடன் சேவை கட்டணம் என்ற பெயரில் 5 சதவீதம் முதல் 20 சதவீதம்வரை வசூலிக்கப்படுகிறது. இதுபற்றி வாடிக்கையாளர்கள் புகார் அளித்ததன்பேரில், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு உருவாக்கியது. அவற்றுக்கு நேற்று ஒப்புதல் அளித்தது.
அதன்படி, சேவை கட்டணம் செலுத்துவது கட்டாயம் அல்ல, அது வாடிக்கையாளரின் விருப்பத்தை பொறுத்தது ஆகும்.
இதுபற்றி மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாவது:-
சேவை கட்டணத்தை உணவகங்கள் தீர்மானிக்கக்கூடாது. அதை வாடிக்கையாளரின் விருப்பத்துக்கு விட்டுவிட வேண்டும். ரசீதில், சேவை கட்டணம் என்ற பகுதியை காலியாக விட வேண்டும். வாடிக்கையாளர் விருப்பப்பட்டால், அதை பூர்த்தி செய்து, மொத்த பில் தொகையை செலுத்தலாம். ஒருவேளை, சேவை கட்டணத்தை கட்டாயமாக வசூலித்தால், நுகர்வோர் கோர்ட்டில் வாடிக்கையாளர்கள் புகார் செய்யலாம். இந்த நெறிமுறைகள், மாநில அரசுகளின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X