search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருப்பு பணத்தை ஒப்புக்கொள்ள ‘கெடு’ நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு
    X

    கருப்பு பணத்தை ஒப்புக்கொள்ள ‘கெடு’ நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

    கருப்பு பணத்தை வைத்திருப்போர் அதனை ஒத்துக்கொள்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
    புதுடெல்லி:

    கணக்கில் காட்டாத வருமானத்தை வைத்திருப்பவர்கள், 49.9 சதவீத வரி, கூடுதல் வரி மற்றும் அபராதம் செலுத்தி, நடவடிக்கையில் இருந்து தப்ப ‘பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. கருப்பு பணத்தில் 25 சதவீதத்தை வட்டி இல்லாத வங்கிக்கணக்கில் செலுத்துவதும் இத்திட்டத்தில் கட்டாயம் ஆகும். இது, கருப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு அளிக்கப்பட்ட கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது.

    கடந்த ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி தொடங்கிய இத்திட்டம், மார்ச் 31-ந் தேதி முடிவடைந்தது. இத்திட்டப்படி, வரி, கூடுதல் வரி மற்றும் அபராதம் செலுத்தியவர்கள், வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்வதற்கு ஏப்ரல் 30-ந் தேதிவரை கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.



    இந்நிலையில், இந்த கால அவகாசத்தை மே 10-ந் தேதிவரை மத்திய அரசு நேற்று நீட்டித்தது. மார்ச் 31-ந் தேதிக்கு முன்பு, வரி, கூடுதல் வரி மற்றும் அபராதம் செலுத்தியவர்கள் மற்றும் ஏப்ரல் 30-ந் தேதிக்கு முன்பு வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்தவர்களுக்கு இந்த கால நீட்டிப்பு பொருந்தும்.

    அவர்கள் வரி மற்றும் டெபாசிட் செலுத்தியதற்கான ஆவணங்களை வருமானவரி கணக்கு தாக்கலுக்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, கருப்பு பண பிரகடனத்தை வெளியிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×