என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமண சடங்கில் பரிதாபம்: வயிற்றில் வாள் பாய்ந்து சிறுவன் பலி
Byமாலை மலர்21 April 2017 10:48 AM GMT (Updated: 21 April 2017 10:49 AM GMT)
மத்திய பிரதேச மாநிலத்தின் நீமுக் மாவட்டத்தில் திருமண சடங்கின் போது வயிற்றில் வாள் பாய்ந்து சிறுவன் பலியான சம்பவம் திருமணத்தை நிறுத்தியதோடு அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
போபால்:
மத்திய பிரதேச மாநிலத்தின் திருமண சடங்கின் ஒரு பகுதியாக மரத்தில் இருக்கும் இலைகளை வெட்டும் வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.
இவ்வாறு நீமுக் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண சடங்கில் மாப்பிள்ளை இலையை வெட்டும் போது அருகில் நின்று கொண்டிருந்த சிறுவனின் வயிற்றில் வாள் பாய்ந்ததில் சிறுவனுக்கு படுகாயம் ஏற்பட்டது.
படுகாயம் அடைந்த அந்த சிறுவனை சம்பவம் நடந்த கிராமத்தில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமணைக்கு தூக்கி சென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவத்தை அடுத்து நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.
திருமண சடங்கின் போது ஏற்பட்ட சம்பவத்தை தொடர்ந்து போலீசார் மாப்பிள்ளையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X