என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் பரவும் டெங்கு காய்ச்சல்: ஒரேநாளில் 745 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
Byமாலை மலர்21 April 2017 5:23 AM GMT (Updated: 21 April 2017 5:23 AM GMT)
ஒரேநாளில் டெங்கு, சிக்கன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 745 பேர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் குடிநீருக்கே மக்கள் திண்டாடும் நிலை உள்ளது. இதை தொடர்ந்து கேரளாவை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் கேரளாவில் டெங்கு காய்ச்சல், சிக்கன்குனியா காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது.
இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று ஏராளமானவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளுக்கும், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் படை எடுத்து வருகிறார்கள். நாளுக்கு நாள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று ஒரேநாளில் டெங்கு, சிக்கன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 745 பேர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதை தொடர்ந்து மாநிலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கணக்கு எடுக்கும் பணியில் மாநில சுகாதாரத்துறை தொடங்கி உள்ளது.
மேலும் பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் உடனே ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல வேண்டும், சுய மருத்துவம் செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கி உள்ளனர். மேலும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த உதவவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கேரளாவில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் குடிநீருக்கே மக்கள் திண்டாடும் நிலை உள்ளது. இதை தொடர்ந்து கேரளாவை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் கேரளாவில் டெங்கு காய்ச்சல், சிக்கன்குனியா காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது.
இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று ஏராளமானவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளுக்கும், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் படை எடுத்து வருகிறார்கள். நாளுக்கு நாள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று ஒரேநாளில் டெங்கு, சிக்கன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 745 பேர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதை தொடர்ந்து மாநிலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கணக்கு எடுக்கும் பணியில் மாநில சுகாதாரத்துறை தொடங்கி உள்ளது.
மேலும் பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் உடனே ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல வேண்டும், சுய மருத்துவம் செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கி உள்ளனர். மேலும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த உதவவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X