என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமைச்சர்கள் சொத்து பட்டியலை வெளியிட வேண்டும்: யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி
Byமாலை மலர்18 April 2017 1:49 PM GMT (Updated: 18 April 2017 1:49 PM GMT)
உத்தர பிரதேசத்தில் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தற்போது அமைச்சர்கள் அனைவரும் சொத்துப் பட்டியலை வெளியிடும்படி கூறியுள்ளார்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா அரசு அமைந்த பின்னர் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
சட்டவிரோதமாக செயல்பட்ட இறைச்சி கூடங்களுக்கு சீல் வைத்தல், மக்கள் அதிகமாக கூடும் சந்தை இடங்களில் சுகாதார நிலை குறித்து சோதனை, பெண்களுக்கு எந்தஒரு தொல்லையும் ஏற்பட்டுவிடாத வண்ணம் போலீஸ் கண்காணிப்பு, அரசு அலுவலங்களில் அதிகாரிகள், ஊழியர்கள் பான் - மசாலா பயன்படுத்த தடை, அனைத்து துறைகளும் மாதம் தோறும் அறிக்கை தாக்கல் செய்தல், அதிகாரிகள், அரசியல்வாதிகள் சொத்து விபரங்களை தெரிவிக்க வேண்டும், ஆசிரியர்கள் பள்ளிகளில் டி-சர்ட் அணிய கூடாது. பள்ளியில் தேவையில்லாமல் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது, கிரிமினல் பின்னணி கொண்ட ஒப்பந்ததார்களை அதிகாரிகள் உடனடியாக மாற்ற வேண்டும் என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இப்போது அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து பற்றிய விவரங்களை ஆண்டுதோறும் அறிவிக்க வேண்டும் என யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளார்.
‘அமைச்சர்கள் அனைவரும் தங்களது பணிகளில் எந்தவித சுணக்கமும் இல்லாமல் செயல்பட வேண்டும். ஆண்டுதோறும் மார்ச் 31-ம் தேதிக்குள் சொத்து பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும். தொழிலதிபர்கள் மற்றும் ஒப்பந்ததார்களிடம் இருந்து இடைவெளியை பின்பற்றுவது அவசியம். ரூ.5 ஆயிரத்துக்கு மேலான மதிப்புள்ள பொருட்களை அன்பளிப்பாக வாங்கக்கூடாது.
உயர்தரமிக்க ஓட்டல்களிலோ, பார்ட்டிகளிலோ கலந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சொந்தக் காரணங்களுக்கோ அல்லது அரசுப் பணி காரணமாகவோ வெளியூர் செல்லும்போது, அங்குள்ள அரசு விடுதிகளில் மட்டுமே தங்க வேண்டும்’ என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X