என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் ராணுவ வீரர்கள், எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் மீது வழக்கு பதிவு
Byமாலை மலர்17 April 2017 7:50 PM GMT (Updated: 17 April 2017 7:51 PM GMT)
கல்வீச்சில் இருந்து தப்பிக்க வாலிபர் ஒருவரை மனித கேடயமாக பயன்படுத்திய ராணுவவீரர்களின் செயலை கண்டித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் ராணுவவீரர்கள் மற்றும் எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் மீது உள்ளூர்வாசிகள் கற்களை வீசி எறிவதும், அப்படி தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில், ஒரு ராணுவ வாகனத்தின் முன்பக்கம் ஒருவரை கட்டிவைத்து ராணுவ வீரர்கள் அந்த வாகனத்தை ஓட்டி செல்வதும், “தங்கள் மீது கல்வீச்சு நடத்தினால் அவர்களுக்கும் இதே கதிதான்” என ராணுவவீரர் ஒருவர் பேசும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. கல்வீச்சில் இருந்து தப்பிக்க வாலிபர் ஒருவரை மனித கேடயமாக பயன்படுத்திய ராணுவவீரர்களின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத ராணுவவீரர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இது தொடர்பான விசாரணை துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் இருக்கும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீநகரில் தங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியவர்களை குறிவைத்து எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
காஷ்மீரில் ராணுவவீரர்கள் மற்றும் எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் மீது உள்ளூர்வாசிகள் கற்களை வீசி எறிவதும், அப்படி தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில், ஒரு ராணுவ வாகனத்தின் முன்பக்கம் ஒருவரை கட்டிவைத்து ராணுவ வீரர்கள் அந்த வாகனத்தை ஓட்டி செல்வதும், “தங்கள் மீது கல்வீச்சு நடத்தினால் அவர்களுக்கும் இதே கதிதான்” என ராணுவவீரர் ஒருவர் பேசும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. கல்வீச்சில் இருந்து தப்பிக்க வாலிபர் ஒருவரை மனித கேடயமாக பயன்படுத்திய ராணுவவீரர்களின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத ராணுவவீரர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இது தொடர்பான விசாரணை துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் இருக்கும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீநகரில் தங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியவர்களை குறிவைத்து எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X