என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதலித்ததால் ஆத்திரம்: மகள்-காதலன் இருவரையும் கோடாரியால் வெட்டிக்கொன்ற தந்தை
Byமாலை மலர்4 April 2017 11:09 AM GMT (Updated: 4 April 2017 11:09 AM GMT)
மகள் காதலித்ததால் ஆத்திரமடைந்த தந்தை மகளுடன் சேர்த்து அவளது காதலனையும் கோடாரியால் வெட்டிக்கொலை செய்தார். இந்த சம்பவம் உ.பி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டம் பாம்காரி குர்மின் கிராமத்தை சேர்ந்தவர் மூல்சந்த். இவரின் மகள் கீதாவும்(வயது 19), அதே பகுதியை சேர்ந்த சுனில் அகர்வாரும் (வயது 19) ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலித்து வந்தனர். 3 ஆண்டுகளாக நீண்ட இவர்களது காதல் கீதாவின் தந்தை மூல்சந்துக்கு தெரியவந்தது. அவர் தன் மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று கீதாவை சந்திப்பதற்காக சுனில் சென்றுள்ளார். அப்போது, கீதாவின் தந்தை மூல்சந்த் கோடாரியால் சுனிலைத் தாக்கியிருக்கிறார். சுனிலைக் காப்பாற்ற முயன்ற கீதாவையும் மூல்சந்த் கோடாரியால் தாக்க, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக சுனிலின் தாத்தா போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய, புகாரைத் தொடர்ந்து மூல்சந்தை போலீசார் கைது செய்துள்ளனர். கீதா-சுனில் இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டம் பாம்காரி குர்மின் கிராமத்தை சேர்ந்தவர் மூல்சந்த். இவரின் மகள் கீதாவும்(வயது 19), அதே பகுதியை சேர்ந்த சுனில் அகர்வாரும் (வயது 19) ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலித்து வந்தனர். 3 ஆண்டுகளாக நீண்ட இவர்களது காதல் கீதாவின் தந்தை மூல்சந்துக்கு தெரியவந்தது. அவர் தன் மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று கீதாவை சந்திப்பதற்காக சுனில் சென்றுள்ளார். அப்போது, கீதாவின் தந்தை மூல்சந்த் கோடாரியால் சுனிலைத் தாக்கியிருக்கிறார். சுனிலைக் காப்பாற்ற முயன்ற கீதாவையும் மூல்சந்த் கோடாரியால் தாக்க, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக சுனிலின் தாத்தா போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய, புகாரைத் தொடர்ந்து மூல்சந்தை போலீசார் கைது செய்துள்ளனர். கீதா-சுனில் இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X