என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விமான பணிப்பெண்களிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட இங்கிலாந்து நாட்டவர்கள் இருவர் கைது
Byமாலை மலர்1 April 2017 6:22 PM GMT (Updated: 1 April 2017 6:22 PM GMT)
நடுவானில் விமான பணிப்பெண்களிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இருவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
புதுடெல்லி:
லண்டனில் இருந்து புதுடெல்லிக்கு நேற்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது குடிபோதையில் இருந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இரு நபர்கள் பணியில் இருந்த விமான பணிப்பெண்களிடம் தேவையற்ற வார்த்தைகளை கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். விமானம் இன்று புதுடெல்லியில் தரையிறங்கியதும் பாதிக்கப்பட்ட பெண்கள் விமான நிறுவன மேலாளரிடம் சென்று புகாரளித்துள்ளனர்.
அதையடுத்து, விமான நிறுவனம் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டது. புகரையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரிடமும் போலீசார் நடத்திய சோதனையில் அவர்கள் குடிபோதையில் இருப்பது உறுதியானது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து பின்னர், அவர்களின் சொந்த ஜாமினில் விடுவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஏர் இந்தியா விமான நிறுவனம், விமானத்தில் பயணிகளின் தனிப்பட்ட சுதந்திரத்தில் நிறுவனம் தலையிடாது, ஆனால், அது குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
லண்டனில் இருந்து புதுடெல்லிக்கு நேற்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது குடிபோதையில் இருந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இரு நபர்கள் பணியில் இருந்த விமான பணிப்பெண்களிடம் தேவையற்ற வார்த்தைகளை கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். விமானம் இன்று புதுடெல்லியில் தரையிறங்கியதும் பாதிக்கப்பட்ட பெண்கள் விமான நிறுவன மேலாளரிடம் சென்று புகாரளித்துள்ளனர்.
அதையடுத்து, விமான நிறுவனம் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டது. புகரையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரிடமும் போலீசார் நடத்திய சோதனையில் அவர்கள் குடிபோதையில் இருப்பது உறுதியானது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து பின்னர், அவர்களின் சொந்த ஜாமினில் விடுவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஏர் இந்தியா விமான நிறுவனம், விமானத்தில் பயணிகளின் தனிப்பட்ட சுதந்திரத்தில் நிறுவனம் தலையிடாது, ஆனால், அது குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X