என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவால் அசைவமின்றி தவிக்கும் மாணவர்கள்
Byமாலை மலர்30 March 2017 1:55 PM GMT (Updated: 30 March 2017 1:55 PM GMT)
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவால், கல்லூரி மாணவர்கள் அசைவமின்றி தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லக்னோ:
உத்தரபிரதேசத்தில் புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்ற யோகி ஆதித்ய நாத் அனுமதி இல்லாத ஆடு, மாடு வெட்டும் கூடங்கள், இறைச்சி கடைகள் ஆகியவற்றை மூட உத்தரவிட்டார். இதனை எதிர்த்து இறைச்சி விற்பனையாளர்களும், அசைவ உணவகங்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.இதனால் திருமணங்களிலும் அசைவத்திற்குப் பதிலாக சைவ சாப்பாடு பரிமாறப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், முதல்வர் உத்தரவால் கல்லூரி மாணவர்கள் அசைவமின்றி தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் பல்கலை மாணவர்களுக்கு அசைவ உணவு வழங்க முடியாததால் சைவ உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் விரக்தி அடைந்துள்ளதாக பல்கலைக்கழக உணவக பொறுப்பாளர் இம்தியாஸ் அலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “தொடர்ந்து 3-4 நாட்களாக சைவ உணவை வழங்கி வருகிறோம். இதனால் மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்” என்றார்.
உத்தரபிரதேசத்தில் புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்ற யோகி ஆதித்ய நாத் அனுமதி இல்லாத ஆடு, மாடு வெட்டும் கூடங்கள், இறைச்சி கடைகள் ஆகியவற்றை மூட உத்தரவிட்டார். இதனை எதிர்த்து இறைச்சி விற்பனையாளர்களும், அசைவ உணவகங்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.இதனால் திருமணங்களிலும் அசைவத்திற்குப் பதிலாக சைவ சாப்பாடு பரிமாறப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், முதல்வர் உத்தரவால் கல்லூரி மாணவர்கள் அசைவமின்றி தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் பல்கலை மாணவர்களுக்கு அசைவ உணவு வழங்க முடியாததால் சைவ உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் விரக்தி அடைந்துள்ளதாக பல்கலைக்கழக உணவக பொறுப்பாளர் இம்தியாஸ் அலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “தொடர்ந்து 3-4 நாட்களாக சைவ உணவை வழங்கி வருகிறோம். இதனால் மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X