என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நகர்ப்புற ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தருவதில் தமிழகத்திற்கு 4-வது இடம்: வெங்கையா நாயுடு தகவல்
Byமாலை மலர்30 March 2017 11:55 AM GMT (Updated: 30 March 2017 11:55 AM GMT)
நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தருவதில் தமிழகம் 4-வது இடம் பிடித்துள்ளதாக, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
புது டெல்லி:
நாடு முழுவதும் 7 வருடங்களில் 2 கோடி வீடுகளை கட்டவேண்டும் என்ற நோக்கத்திலே, கடந்த 2015-ம் ஆண்டு நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தரும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் வரும் 2022-ம் ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது.
நாட்டில் நகர்ப்புறங்களில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், குறைந்த வருமானம் கொண்டவர்கள் மற்றும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டமானது கொண்டுவரப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தருவதில் தமிழகம் 4-வது இடம் பிடித்துள்ளதாக, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று மாநிலங்களவையில் வெங்கையா நாயுடு பேசுகையில் “நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தருவதில் குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன. குஜராத் மாநிலத்தில் 25,783 வீடுகளும், ராஜஸ்தான் மாநிலத்தில் 10,805 வீடுகளும், கர்நாடகா மாநிலத்தில் 10,447 வீடுகளும் இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளன.
6,940 வீடுகளுடன் தமிழகம் இதில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் சென்னையில் 1,279 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நகரங்களின் பட்டியலைப் பொறுத்தவரை சென்னை 5-வது இடத்தைப் பிடித்துள்ளது" என்றார்.
நாடு முழுவதும் 7 வருடங்களில் 2 கோடி வீடுகளை கட்டவேண்டும் என்ற நோக்கத்திலே, கடந்த 2015-ம் ஆண்டு நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தரும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் வரும் 2022-ம் ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது.
நாட்டில் நகர்ப்புறங்களில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், குறைந்த வருமானம் கொண்டவர்கள் மற்றும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டமானது கொண்டுவரப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தருவதில் தமிழகம் 4-வது இடம் பிடித்துள்ளதாக, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று மாநிலங்களவையில் வெங்கையா நாயுடு பேசுகையில் “நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தருவதில் குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன. குஜராத் மாநிலத்தில் 25,783 வீடுகளும், ராஜஸ்தான் மாநிலத்தில் 10,805 வீடுகளும், கர்நாடகா மாநிலத்தில் 10,447 வீடுகளும் இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளன.
6,940 வீடுகளுடன் தமிழகம் இதில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் சென்னையில் 1,279 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நகரங்களின் பட்டியலைப் பொறுத்தவரை சென்னை 5-வது இடத்தைப் பிடித்துள்ளது" என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X