என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செருப்படி விவகாரம்: சிவசேனா எம்.பி.யின் டிக்கெட்டை ரத்து செய்தது ஏர் இந்தியா
Byமாலை மலர்28 March 2017 11:45 AM GMT (Updated: 28 March 2017 11:45 AM GMT)
மேனேஜரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி ரவீந்திர கெய்க்வாட்டின் விமான டிக்கெட்டை, ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது.
புது டெல்லி:
மகாராஷ்டிர மாநிலம் உஸ்மானாபாத் தொகுதி சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட். கடந்த வாரம் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த கெய்க்வாட் இருக்கை பிரச்சினை காரணமாக ஏர் இந்தியா மேனேஜரை செருப்பால் 25 முறை அடித்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியது.
இதைத்தொடர்ந்து கெய்க்வாட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் விமானத்தில் செல்ல ஏர் இந்தியா உள்பட 7 விமான நிறுவனங்கள் தடை விதித்தன.
இந்த நிலையில், சிவசேனா எம்.பி ரவீந்திர கெய்க்வாட்டின் விமான டிக்கெட்டை, ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது.
நாளை காலை மும்பையிலிருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்வதற்கு கெய்க்வாட் டிக்கெட் பதிவு செய்திருந்தார். தனது ஊழியர் மூலமாக அவர் இந்த டிக்கெட்டை பதிவு செய்தார். ஆனால், கெய்க்வாட்டின் டிக்கெட்டை ரத்து செய்து விட்டதாக ஏர் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஏர் இந்தியா மேனேஜரை அடித்தது தொடர்பாக கெய்க்வாட் இதுவரை மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிர மாநிலம் உஸ்மானாபாத் தொகுதி சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட். கடந்த வாரம் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த கெய்க்வாட் இருக்கை பிரச்சினை காரணமாக ஏர் இந்தியா மேனேஜரை செருப்பால் 25 முறை அடித்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியது.
இதைத்தொடர்ந்து கெய்க்வாட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் விமானத்தில் செல்ல ஏர் இந்தியா உள்பட 7 விமான நிறுவனங்கள் தடை விதித்தன.
இந்த நிலையில், சிவசேனா எம்.பி ரவீந்திர கெய்க்வாட்டின் விமான டிக்கெட்டை, ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது.
நாளை காலை மும்பையிலிருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்வதற்கு கெய்க்வாட் டிக்கெட் பதிவு செய்திருந்தார். தனது ஊழியர் மூலமாக அவர் இந்த டிக்கெட்டை பதிவு செய்தார். ஆனால், கெய்க்வாட்டின் டிக்கெட்டை ரத்து செய்து விட்டதாக ஏர் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஏர் இந்தியா மேனேஜரை அடித்தது தொடர்பாக கெய்க்வாட் இதுவரை மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X