என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர்: பட்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் கடும் துப்பாக்கிச் சண்டை
Byமாலை மலர்28 March 2017 5:34 AM GMT (Updated: 28 March 2017 5:34 AM GMT)
காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் இன்று காலை தீவிரவாதிகளை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பட்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட சடூரா அருகேயுள்ள டுர்பாக் என்ற இடத்தில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையின் சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மாநில காவல் துறையின் தீவிரவாத ஒழிப்பு சிறப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் அந்த இடத்தை இன்று காலை சுற்றிவளைத்தனர்.
பிறபகுதிகளுடன் அந்தப் பகுதியை இணைக்கும் நாற்புற சாலைகளும் மூடப்பட்டன. பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினர்.
இருதரப்பினருக்கும் இடையில் அங்கே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகவும், சம்பவ இடத்துக்கு கூடுதலாக படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீநகரில் இருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பட்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட சடூரா அருகேயுள்ள டுர்பாக் என்ற இடத்தில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையின் சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மாநில காவல் துறையின் தீவிரவாத ஒழிப்பு சிறப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் அந்த இடத்தை இன்று காலை சுற்றிவளைத்தனர்.
பிறபகுதிகளுடன் அந்தப் பகுதியை இணைக்கும் நாற்புற சாலைகளும் மூடப்பட்டன. பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினர்.
இருதரப்பினருக்கும் இடையில் அங்கே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகவும், சம்பவ இடத்துக்கு கூடுதலாக படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீநகரில் இருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X