என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாயை சுட்டுக்கொன்ற அரசு அதிகாரி கைது: உ.பி-யில் பரபரப்பு
Byமாலை மலர்27 March 2017 2:27 PM GMT (Updated: 27 March 2017 2:27 PM GMT)
நாயை சுட்டுக்கொன்ற அரசு அதிகாரி போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சம்பவம், உத்தர பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொராதாபாத்:
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியை சேர்ந்தவர் விமல் தீர்(59). இவர் அப்பகுதியிலுள்ள எஸ்.சி/எஸ்.டி நலத்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். கடந்த சனிக்கிழமை மாலை கன்ஷிராம் பகுதியிலுள்ள தனது வீட்டில் இருந்து சாலையில் விமல் நடைபயிற்சி செய்துள்ளார்.
அப்போது அப்பகுதியில் உள்ள அசோக்குமார் என்பவரது நாய் இவரைப் பார்த்து குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விமல் தனது கைத்துப்பாக்கியை எடுத்து நாயை சுட்டுக்கொன்றார். இதைத்தொடர்ந்து விமல் தனது நாயை குடிபோதையில் சுட்டுக்கொன்றதாக குமார் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
குமாரின் புகாரையடுத்து விமலை போலீசார் கைது செய்தனர். எனினும் இடைக்கால ஜாமீனில் விமல் தற்போது வெளியே வந்து விட்டார். வருகின்ற 31-ம் தேதி விமல் தீர் ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியை சேர்ந்தவர் விமல் தீர்(59). இவர் அப்பகுதியிலுள்ள எஸ்.சி/எஸ்.டி நலத்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். கடந்த சனிக்கிழமை மாலை கன்ஷிராம் பகுதியிலுள்ள தனது வீட்டில் இருந்து சாலையில் விமல் நடைபயிற்சி செய்துள்ளார்.
அப்போது அப்பகுதியில் உள்ள அசோக்குமார் என்பவரது நாய் இவரைப் பார்த்து குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விமல் தனது கைத்துப்பாக்கியை எடுத்து நாயை சுட்டுக்கொன்றார். இதைத்தொடர்ந்து விமல் தனது நாயை குடிபோதையில் சுட்டுக்கொன்றதாக குமார் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
குமாரின் புகாரையடுத்து விமலை போலீசார் கைது செய்தனர். எனினும் இடைக்கால ஜாமீனில் விமல் தற்போது வெளியே வந்து விட்டார். வருகின்ற 31-ம் தேதி விமல் தீர் ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X