என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத் கோஷ்டி மோதலில் 30 வீடுகளுக்கு தீவைப்பு - போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
Byமாலை மலர்26 March 2017 12:22 AM GMT (Updated: 26 March 2017 12:22 AM GMT)
குஜராத்தில் இரு பிரிவினருக்கு இடையே நிகழ்ந்த கோஷ்டி மோதலில் 30 வீடுகளுக்கு தீவைக்கப்பட்ட சம்பவத்தில் நிகழ்ந்த போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்
ஆமதாபாத்:
குஜராத் மாநிலம் பதான் தாலுகா வதாவாலி கிராமத்தில் நேற்று உயர்நிலைப்பள்ளி தேர்வு எழுதிய 2 மாணவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் இந்த தகராறு முற்றி இரு சமூகங்களுக்கு இடையே மோதலாக மாறியது. சுற்றுவட்டார 3 கிராமங்களை சேர்ந்த இரு பிரிவினரும் சரமாரியாக கற்களால் தாக்கிக்கொண்டனர். ஒரு சமூகத்தை சேர்ந்த 30 வீடுகளுக்கு ஒரு கும்பல் தீவைத்தது. இதில் அந்த வீடுகளும், 25 வாகனங்களும் எரிந்தன. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்துவந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
கலவரத்தை கட்டுப்படுத்த பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தினர் கலையாததால் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் ஒரு இளைஞர் குண்டு பாய்ந்து இறந்தார். 12-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். மாலையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டதும் கலவரம் கட்டுக்குள் வந்தது.
குஜராத் மாநிலம் பதான் தாலுகா வதாவாலி கிராமத்தில் நேற்று உயர்நிலைப்பள்ளி தேர்வு எழுதிய 2 மாணவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் இந்த தகராறு முற்றி இரு சமூகங்களுக்கு இடையே மோதலாக மாறியது. சுற்றுவட்டார 3 கிராமங்களை சேர்ந்த இரு பிரிவினரும் சரமாரியாக கற்களால் தாக்கிக்கொண்டனர். ஒரு சமூகத்தை சேர்ந்த 30 வீடுகளுக்கு ஒரு கும்பல் தீவைத்தது. இதில் அந்த வீடுகளும், 25 வாகனங்களும் எரிந்தன. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்துவந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
கலவரத்தை கட்டுப்படுத்த பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தினர் கலையாததால் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் ஒரு இளைஞர் குண்டு பாய்ந்து இறந்தார். 12-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். மாலையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டதும் கலவரம் கட்டுக்குள் வந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X