search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கோர்ட்டில் ஆஜர்
    X

    அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கோர்ட்டில் ஆஜர்

    டெல்லி கிரிக்கெட் சங்கமும், கிரிக்கெட் வீரர் சேதன் சவுகானும் தொடர்ந்த அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கோர்ட்டில் ஆஜரானார்.
    புதுடெல்லி:

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நிதி முறைகேடுகளும், பாலியல் குற்றங்களும் நடந்திருப்பதாக குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக அவர் மீது டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் டெல்லி கிரிக்கெட் சங்கமும், கிரிக்கெட் வீரர் சேதன் சவுகானும் அவதூறு வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக விலக்கு அளிக்குமாறு அவருடைய வக்கீல் மனு தாக்கல் செய்தார். ஆனால், நேற்று அம்மனுவை ஏற்காத மாஜிஸ்திரேட்டு அபிலாஷ் மல்கோத்ரா, கெஜ்ரிவால் நேரில் ஆஜராக வலியுறுத்தினார்.

    இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் கோர்ட்டில் ஆஜரானார். அவரை ரூ.10 ஆயிரத்துக்கான தனிநபர் ஜாமீனில் விடுவிக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். 
    Next Story
    ×