என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத பிரசாரகர் ஜாகீர் நாயக் அறக்கட்டளையின் ரூ.18 கோடி சொத்துகள் முடக்கம்
Byமாலை மலர்21 March 2017 12:14 AM GMT (Updated: 21 March 2017 12:14 AM GMT)
மத பிரசாரகர் ஜாகீர் நாயக் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.18 கோடியே 37 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கப்பிரிவு நேற்று முடக்கியது.
புதுடெல்லி:
வங்காளதேசத்தில் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு பயங்கரவாதி, இந்தியாவை சேர்ந்த மத பிரசாரகர் ஜாகீர் நாயக்கின் பிரசாரத்தால், தான் தூண்டப்பட்டதாக தெரிவித்தான். இதையடுத்து, ஜாகீர் நாயக்குக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டது. அவர் நடத்தி வரும் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை, மத்திய உள்துறை அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டது. ஜாகீர் நாயக் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இச்சட்டத்தின் கீழ், அந்த அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.18 கோடியே 37 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கப்பிரிவு நேற்று முடக்கியது.
மேலும், இதே வழக்கு தொடர்பாக, வருகிற 30-ந் தேதி, டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் தலைமையகத்தில் ஆஜராகுமாறு ஜாகீர் நாயக்குக்கு தேசிய புலனாய்வு அமைப்பு 2-வது தடவையாக நேற்று நோட்டீஸ் அனுப்பியது.
வங்காளதேசத்தில் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு பயங்கரவாதி, இந்தியாவை சேர்ந்த மத பிரசாரகர் ஜாகீர் நாயக்கின் பிரசாரத்தால், தான் தூண்டப்பட்டதாக தெரிவித்தான். இதையடுத்து, ஜாகீர் நாயக்குக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டது. அவர் நடத்தி வரும் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை, மத்திய உள்துறை அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டது. ஜாகீர் நாயக் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இச்சட்டத்தின் கீழ், அந்த அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.18 கோடியே 37 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கப்பிரிவு நேற்று முடக்கியது.
மேலும், இதே வழக்கு தொடர்பாக, வருகிற 30-ந் தேதி, டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் தலைமையகத்தில் ஆஜராகுமாறு ஜாகீர் நாயக்குக்கு தேசிய புலனாய்வு அமைப்பு 2-வது தடவையாக நேற்று நோட்டீஸ் அனுப்பியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X