என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரகாண்ட் மாநில முதல்வராக பதவியேற்றார் திரிவேந்திர சிங் ராவத்
Byமாலை மலர்18 March 2017 9:45 AM GMT (Updated: 18 March 2017 9:50 AM GMT)
உத்தரகாண்ட் மாநிலத்தின் 8-வது முதல்மந்திரியாக திரிவேந்திர சிங் ராவத் இன்று பதவியேற்றார். பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா, முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் ஆகியோர் பங்கேற்றனர்.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில், பா.ஜ.க. 57 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப்பிடித்தது. காங்கிரஸ் 11 இடங்களிலும், இதர கட்சிகள் 2 இடங்களை பெற்றது.
பா.ஜ.க. சார்பில் உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கான ஆளும்கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரிவேந்திர சிங் ராவத் சட்டசபை கட்சித் தலைவராகவும், முதல் மந்திரியாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, திரிவேந்திர சிங் ராவத் நேற்று ஆளுநர் கே.கே.பாலை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். உரிமை கடிதத்தை பெற்ற ஆளுநர் பால், திரிவேந்திர சிங் ராவத்தை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் 8-வது முதல்-மந்திரியாக திரிவேந்திர சிங் ராவத் இன்று பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் கே.கே.பால் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ராவத் உடன் மற்ற அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
தலைநகர் டேராடூனில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் மற்றும் மத்திய மந்திரிகள் கலந்து கொண்டு புதிய முதல்மந்திரிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில், பா.ஜ.க. 57 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப்பிடித்தது. காங்கிரஸ் 11 இடங்களிலும், இதர கட்சிகள் 2 இடங்களை பெற்றது.
பா.ஜ.க. சார்பில் உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கான ஆளும்கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரிவேந்திர சிங் ராவத் சட்டசபை கட்சித் தலைவராகவும், முதல் மந்திரியாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, திரிவேந்திர சிங் ராவத் நேற்று ஆளுநர் கே.கே.பாலை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். உரிமை கடிதத்தை பெற்ற ஆளுநர் பால், திரிவேந்திர சிங் ராவத்தை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் 8-வது முதல்-மந்திரியாக திரிவேந்திர சிங் ராவத் இன்று பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் கே.கே.பால் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ராவத் உடன் மற்ற அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
தலைநகர் டேராடூனில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் மற்றும் மத்திய மந்திரிகள் கலந்து கொண்டு புதிய முதல்மந்திரிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X