என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரகாண்ட்டில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு: முதல்வராகிறார் திரிவேந்திர சிங் ராவத்
Byமாலை மலர்17 March 2017 9:06 PM GMT (Updated: 17 March 2017 9:06 PM GMT)
உத்தரகாண்ட்டில் பா.ஜ.க. சார்பில் ஆட்சி அமைக்க வருமாறு திரிவேந்திர சிங் ராவத்துக்கு அம்மாநில ஆளுநர் கே.கே.பால் அழைப்பு விடுத்துள்ளார்.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் 70 தொகுதிகளில் பா.ஜ.க. 57 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 11 இடங்களிலும், இதர கட்சிகள் 2 இடங்களையும் கைப்பற்றியது.
அதனைத்தொடர்ந்து பா.ஜ.க.வின் சட்டமன்றக் கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று டேராடூனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்றக் கட்சி தலைவராக அக்கட்சியின் மூத்த தலைவரான திரிவேந்திர சிங் ராவத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, திரிவேந்திர சிங் ராவத் ஆளுநர் கே.கே.பாலை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். உரிமை கடிதத்தை பெற்ற ஆளுநர் பால், திரிவேந்திர சிங் ராவத்தை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக திரிவேந்திர சிங் ராவத் நாளை (18-ம் தேதி) பதவி ஏற்கவுள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய மந்திரிகள் பங்கேற்க உள்ளதாக மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் 70 தொகுதிகளில் பா.ஜ.க. 57 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 11 இடங்களிலும், இதர கட்சிகள் 2 இடங்களையும் கைப்பற்றியது.
அதனைத்தொடர்ந்து பா.ஜ.க.வின் சட்டமன்றக் கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று டேராடூனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்றக் கட்சி தலைவராக அக்கட்சியின் மூத்த தலைவரான திரிவேந்திர சிங் ராவத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, திரிவேந்திர சிங் ராவத் ஆளுநர் கே.கே.பாலை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். உரிமை கடிதத்தை பெற்ற ஆளுநர் பால், திரிவேந்திர சிங் ராவத்தை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக திரிவேந்திர சிங் ராவத் நாளை (18-ம் தேதி) பதவி ஏற்கவுள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய மந்திரிகள் பங்கேற்க உள்ளதாக மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X