என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரகாண்ட் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் திரிவேந்திர சிங் ராவத்
Byமாலை மலர்17 March 2017 1:33 PM GMT (Updated: 17 March 2017 1:33 PM GMT)
உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிவேந்திர சிங் ராவத், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில், பா.ஜ.க. 57 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதர கட்சிகள் 2 இடங்களை பெற்றது. இதையடுத்து ஆட்சியமைக்கும் பணிகளைத் தொடங்கியது பா.ஜ.க.
இந்நிலையில், பா.ஜ.க.வின் சட்டமன்றக் கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று டேராடூனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரிவேந்திர சிங் ராவத் சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, திரிவேந்திர சிங் ராவத் ஆளுநர் கே.கே.பாலை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். மேலும், தனக்கு 57 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிப்பது தொடர்பான கடிதத்தையும் வழங்கினார். அவருடன் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த தலைவர்களும் ஆளுநர் மாளிகைக்குச் சென்றனர்.
ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்ததும், உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக நாளை (18-ம் தேதி) திரிவேந்திர சிங் ராவத் பதவி ஏற்கவுள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய மந்திரிகள் பங்கேற்க உள்ளதாக மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில், பா.ஜ.க. 57 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதர கட்சிகள் 2 இடங்களை பெற்றது. இதையடுத்து ஆட்சியமைக்கும் பணிகளைத் தொடங்கியது பா.ஜ.க.
இந்நிலையில், பா.ஜ.க.வின் சட்டமன்றக் கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று டேராடூனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரிவேந்திர சிங் ராவத் சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, திரிவேந்திர சிங் ராவத் ஆளுநர் கே.கே.பாலை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். மேலும், தனக்கு 57 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிப்பது தொடர்பான கடிதத்தையும் வழங்கினார். அவருடன் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த தலைவர்களும் ஆளுநர் மாளிகைக்குச் சென்றனர்.
ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்ததும், உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக நாளை (18-ம் தேதி) திரிவேந்திர சிங் ராவத் பதவி ஏற்கவுள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய மந்திரிகள் பங்கேற்க உள்ளதாக மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X