என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொது கணக்கு குழுவின் தலைவராகிறார் மல்லிகார்ஜுன கார்கே
Byமாலை மலர்15 March 2017 4:33 PM GMT (Updated: 15 March 2017 4:33 PM GMT)
பொது கணக்கு குழுவின் அடுத்த தலைவராக மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவை நியமிக்கும்படி கட்சி தலைமை பரிந்துரை செய்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசின் வருவாய் மற்றும் செலவினங்களை தணிக்கை செய்வதற்கு, தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பொது கணக்கு குழு அமைக்கப்படுகிறது. பாராளுமன்றத்தால் அமைக்கப்படும் இந்த குழு ஒவ்வொரு ஆண்டும் மாற்றியமைக்கப்படுகிறது.
பொது கணக்கு குழுவின் தலைவர் பதவியானது, பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. உறுப்பினர்களைப் பொருத்தவரையில், மக்களவையில் இருந்து 15 பேர், மாநிலங்களவையில் இருந்து 7 பேர் என அதிகபட்சம் 22 பேர் வரை இடம்பெறலாம்.
இந்நிலையில், தற்போதைய பொது கணக்கு குழு தலைவரான கே.வி.தாமசின் பதவிக்காலம் ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. தொடர்ந்து மூன்று முறை தலைவராக இருந்த அவருக்குப் பிறகு, அடுத்த தலைவர் பதவிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவை காங்கிரஸ் பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக சபாநாயகருக்கு காங்கிரஸ் தலைமை கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசின் வருவாய் மற்றும் செலவினங்களை தணிக்கை செய்வதற்கு, தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பொது கணக்கு குழு அமைக்கப்படுகிறது. பாராளுமன்றத்தால் அமைக்கப்படும் இந்த குழு ஒவ்வொரு ஆண்டும் மாற்றியமைக்கப்படுகிறது.
பொது கணக்கு குழுவின் தலைவர் பதவியானது, பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. உறுப்பினர்களைப் பொருத்தவரையில், மக்களவையில் இருந்து 15 பேர், மாநிலங்களவையில் இருந்து 7 பேர் என அதிகபட்சம் 22 பேர் வரை இடம்பெறலாம்.
இந்நிலையில், தற்போதைய பொது கணக்கு குழு தலைவரான கே.வி.தாமசின் பதவிக்காலம் ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. தொடர்ந்து மூன்று முறை தலைவராக இருந்த அவருக்குப் பிறகு, அடுத்த தலைவர் பதவிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவை காங்கிரஸ் பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக சபாநாயகருக்கு காங்கிரஸ் தலைமை கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X