என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணிப்பூரின் முதல் பா.ஜ.க. முதலமைச்சராக பிரேன் சிங் நாளை பதவியேற்பு
Byமாலை மலர்14 March 2017 1:11 PM GMT (Updated: 14 March 2017 1:11 PM GMT)
மணிப்பூரின் முதல் பா.ஜ.க. முதலமைச்சராக பிரேன் சிங் நாளை பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இம்பால்:
மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28 இடங்களிலும், பா.ஜனதா 21 இடங்களிலும் வெற்றி பெற்றன.
எனவே, சிறிய கட்சிகள் ஆதரவுடன் மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மாநில சட்டமன்ற பா.ஜனதா தலைவராக பிரேன்சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாகா மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் நஜ்மா ஹெப்துல்லாவை இன்று சந்தித்தனர். அவர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை கொடுத்தனர்.
இதையடுத்து நாளை ஆட்சியமைக்க வரும்படி பா.ஜ.க.வுக்கு ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார். பதவியேற்பு விழா மதியம் 1 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
எனவே, நாளை காலை முதல் மந்திரி பிரேன் சிங் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் நஜிமா ஹெப்துல்லா பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். விழாவில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் பங்கேற உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம், மணிப்பூரின் முதல் பா.ஜ.க. முதல்வராக பிரேன் சிங் பதவியேற்க உள்ளார்.
இதற்கிடையே பா.ஜ.க. ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ள நாகா மக்கள் முன்னணி, தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேருக்கும் முக்கிய இலாகாக்களுடன் கூடிய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.
மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28 இடங்களிலும், பா.ஜனதா 21 இடங்களிலும் வெற்றி பெற்றன.
எனவே, சிறிய கட்சிகள் ஆதரவுடன் மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மாநில சட்டமன்ற பா.ஜனதா தலைவராக பிரேன்சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாகா மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் நஜ்மா ஹெப்துல்லாவை இன்று சந்தித்தனர். அவர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை கொடுத்தனர்.
இதையடுத்து நாளை ஆட்சியமைக்க வரும்படி பா.ஜ.க.வுக்கு ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார். பதவியேற்பு விழா மதியம் 1 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
எனவே, நாளை காலை முதல் மந்திரி பிரேன் சிங் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் நஜிமா ஹெப்துல்லா பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். விழாவில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் பங்கேற உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம், மணிப்பூரின் முதல் பா.ஜ.க. முதல்வராக பிரேன் சிங் பதவியேற்க உள்ளார்.
இதற்கிடையே பா.ஜ.க. ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ள நாகா மக்கள் முன்னணி, தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேருக்கும் முக்கிய இலாகாக்களுடன் கூடிய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X