search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளஸ்-1 மாணவி கற்பழிப்பு: கைதான பாதிரியார் ஜெயிலில் அடைப்பு
    X

    பிளஸ்-1 மாணவி கற்பழிப்பு: கைதான பாதிரியார் ஜெயிலில் அடைப்பு

    கேரளாவில் பிளஸ்-1 மாணவியை கற்பழித்து கைதான பாதிரியாரை போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் வடக்கன்சேரியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்தவர் ராபின் வடக்கன்சேரி. மேலும் இவர் அந்த பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு பள்ளியில் மேலாளராகவும் பணியாற்றினார்.

    இந்தநிலையில் அந்த பள்ளியில் படித்த பிளஸ்-1 மாணவி ஒருவர் பாதிரியார் ராபின் வடக்கன்சேரியால் கற்பழிக்கப்பட்டதாக புகார் எழுந்தது இதற்கிடையில் கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு குழந்தையும் பிறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி பரவூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்த விசாரணையில் பிளஸ்-1 மாணவியை பாதிரியார் ராபின் வடக்கன்சேரி கற்பழித்தது உறுதியானது. இதைதொடர்ந்து அவரை கைது செய்தனர். அவர் வெளிநாடு தப்பிச்செல்ல இருந்த நிலையில் போலீசில் சிக்கிக் கொண்டார்.

    இதை தொடர்ந்து அவரை கண்ணூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த கோர்ட்டு அவரை 15 நாள் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டது. இதனால் பாதிரியார் ராபின் வடக்கன்சேரி கண்ணூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    மேலும் மன்னந்தாவடி ஆயர் இல்லம் இது தொடர்பாக ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில் ஆலய நிர்வாகத்தில் இருந்தும், அனைத்து பணியில் இருந்தும் ராபின் வடக்கன்சேரி விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×