என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் 15 ஆண்டுகளில் செய்யாததை பாஜக 15 மாதங்களில் செய்யும்: மோடி ஆவேசப்பேச்சு
Byமாலை மலர்25 Feb 2017 9:58 AM GMT (Updated: 25 Feb 2017 9:58 AM GMT)
மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் 15 ஆண்டுகளில் செய்யாததை, பாஜக 15 மாதங்களில் செய்யும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இம்பால்:
மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மார்ச்) 4 மற்றும் 8-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த பிரசார கூட்டம் நடக்கிறது.இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, இம்பால் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட லாங்ஜிங் அச்சவுபா மைதானத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மணிப்பூர் மாநிலம் தற்போது அழிந்து வருகிறது. இதற்கு யார் காரணம்? மணிப்பூர் முதலமைச்சர் ஒக்ராம் இபோபி சிங், கடந்த 15 ஆண்டுகளாக இங்கே ஆட்சி புரிந்து வருகிறார். எனினும், கிழக்கு சுவிட்சர்லாந்து என மணிப்பூர் புகழப்படுகிறது. ஆனால் இங்கு ஏதாவது வளர்ச்சியைக் காண முடிகிறதா? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளதா?
பொதுமக்களாகிய நீங்கள் இந்தத் தேர்தலில் பாஜக கட்சியை தேர்ந்தெடுத்தால், பாஜக உங்களுக்கு சேவை செய்யும். காங்கிரஸ் கட்சிக்கு 15 வருடங்களைக் கொடுத்த நீங்கள், எங்களுக்கு வெறும் 5 ஆண்டுகளைக் கொடுங்கள். அவர்கள் 15 வருடங்களில் செய்யாததை நாங்கள் 15 மாதங்களில் செய்து காட்டுவோம்.
விவசாயிகளுக்கு தண்ணீர், குழந்தைகளுக்கு கல்வி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் முதியவர்களுக்கு மருந்துகள் ஆகியவற்றை மணிப்பூர் மக்களுக்குக் கொடுக்க நாங்கள் விரும்புகிறோம்.
இன்று எங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறதோ, அங்கு முன்னேற்றம் என்பது இல்லை. ஆனால், பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன".
இவ்வாறு மோடி பேசினார்.
மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மார்ச்) 4 மற்றும் 8-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த பிரசார கூட்டம் நடக்கிறது.இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, இம்பால் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட லாங்ஜிங் அச்சவுபா மைதானத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மணிப்பூர் மாநிலம் தற்போது அழிந்து வருகிறது. இதற்கு யார் காரணம்? மணிப்பூர் முதலமைச்சர் ஒக்ராம் இபோபி சிங், கடந்த 15 ஆண்டுகளாக இங்கே ஆட்சி புரிந்து வருகிறார். எனினும், கிழக்கு சுவிட்சர்லாந்து என மணிப்பூர் புகழப்படுகிறது. ஆனால் இங்கு ஏதாவது வளர்ச்சியைக் காண முடிகிறதா? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளதா?
பொதுமக்களாகிய நீங்கள் இந்தத் தேர்தலில் பாஜக கட்சியை தேர்ந்தெடுத்தால், பாஜக உங்களுக்கு சேவை செய்யும். காங்கிரஸ் கட்சிக்கு 15 வருடங்களைக் கொடுத்த நீங்கள், எங்களுக்கு வெறும் 5 ஆண்டுகளைக் கொடுங்கள். அவர்கள் 15 வருடங்களில் செய்யாததை நாங்கள் 15 மாதங்களில் செய்து காட்டுவோம்.
விவசாயிகளுக்கு தண்ணீர், குழந்தைகளுக்கு கல்வி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் முதியவர்களுக்கு மருந்துகள் ஆகியவற்றை மணிப்பூர் மக்களுக்குக் கொடுக்க நாங்கள் விரும்புகிறோம்.
இன்று எங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறதோ, அங்கு முன்னேற்றம் என்பது இல்லை. ஆனால், பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன".
இவ்வாறு மோடி பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X