என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரப்பிரதேசத்தின் எதிர்காலத்தை இந்த தேர்தல் நிர்ணயிக்கும் - அமித்ஷா பேச்சு
Byமாலை மலர்25 Feb 2017 9:45 AM GMT (Updated: 25 Feb 2017 9:44 AM GMT)
உத்தரப்பிரதேச மாநிலத்தின் எதிர்காலத்தை தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல் நிர்ணயிக்கும் என பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
லக்னோ:
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. முதல் 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் 5-ம் கட்ட தேர்தலானது வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. 52 தொகுதிகளை உள்ளடக்கிய இத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைதால் அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், லக்னோ அருகே உள்ள அம்பேத்கர் நகரில் நடந்த பா.ஜ.க.வின் தேர்தல் பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த் சட்டசபைத் தேர்தல் வெறும் அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் அல்ல. உத்தரப்பிரதேச மாநிலத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல். குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளாக அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு இடையே நடந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தல்.
60 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி நாட்டுக்காக என்ன செய்தது?. ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகிய இரு இளவரசர்களின் கதைகள் தனித்துவமானது. ஒருவர் (ராகுல் காந்தி) தனது தாயாருக்கே சரியான சவாலாக இருந்து வருகிறார். இன்னொருவர் (அகிலேஷ்) தனது தந்தையிடம் பிரச்சனை செய்தே வருகிறார். இவர்களின் பிரச்சனையால் மாநிலம் கவலை கொண்டு வருகிறது.
இவ்வாறு பேசினார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. முதல் 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் 5-ம் கட்ட தேர்தலானது வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. 52 தொகுதிகளை உள்ளடக்கிய இத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைதால் அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், லக்னோ அருகே உள்ள அம்பேத்கர் நகரில் நடந்த பா.ஜ.க.வின் தேர்தல் பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த் சட்டசபைத் தேர்தல் வெறும் அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் அல்ல. உத்தரப்பிரதேச மாநிலத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல். குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளாக அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு இடையே நடந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தல்.
60 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி நாட்டுக்காக என்ன செய்தது?. ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகிய இரு இளவரசர்களின் கதைகள் தனித்துவமானது. ஒருவர் (ராகுல் காந்தி) தனது தாயாருக்கே சரியான சவாலாக இருந்து வருகிறார். இன்னொருவர் (அகிலேஷ்) தனது தந்தையிடம் பிரச்சனை செய்தே வருகிறார். இவர்களின் பிரச்சனையால் மாநிலம் கவலை கொண்டு வருகிறது.
இவ்வாறு பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X