என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேள்வித்தாளை கசிய விட்ட விவகாரம்: பீகாரில் தேர்வாணைய தலைவர் கைது
Byமாலை மலர்24 Feb 2017 9:33 PM GMT (Updated: 24 Feb 2017 9:33 PM GMT)
பீகாரில் முன்கூட்டியே கேள்வித்தாளை கசிய விட்டு ஊழல் வழக்கில் தேர்வாணைய தலைவரை சிறப்பு புலனாய்வு படையினர் கைது செய்தனர்.
பாட்னா:
பீகாரில் கடந்த 8-ந் தேதி மாநில அரசில் குமாஸ்தா வேலைக்கு (கிளார்க்கு) ஆட்களை தேர்வு செய்வதற்கான தேர்வினை பீகார் பணியாளர் தேர்வாணையம் நடத்த இருந்தது. ஆனால் அதற்கான கேள்வித்தாளை முன்கூட்டியே கசிய விட்டு, ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த தேர்வு ரத்தானது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தியதில், இதில் தேர்வாணையத்தின் தலைவர் சுதிர் குமாருக்கு முக்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரையும், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரையும் சிறப்பு புலனாய்வு படையினர் ஜார்கண்ட் மாநிலம், ஹசாரிபாக்கில் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் சுதிர் குமாரின் நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சுதிர் குமார் கைது செய்யப்பட்டிருப்பதற்கு மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதுடன், இந்த விவகாரத்தை முதல்-மந்திரியிடம் எடுத்துச்செல்லப்போவதாக கூறி உள்ளது.
அத்துடன், இந்த விவகாரத்தில் விசாரணை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
பீகாரில் கடந்த 8-ந் தேதி மாநில அரசில் குமாஸ்தா வேலைக்கு (கிளார்க்கு) ஆட்களை தேர்வு செய்வதற்கான தேர்வினை பீகார் பணியாளர் தேர்வாணையம் நடத்த இருந்தது. ஆனால் அதற்கான கேள்வித்தாளை முன்கூட்டியே கசிய விட்டு, ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த தேர்வு ரத்தானது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தியதில், இதில் தேர்வாணையத்தின் தலைவர் சுதிர் குமாருக்கு முக்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரையும், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரையும் சிறப்பு புலனாய்வு படையினர் ஜார்கண்ட் மாநிலம், ஹசாரிபாக்கில் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் சுதிர் குமாரின் நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சுதிர் குமார் கைது செய்யப்பட்டிருப்பதற்கு மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதுடன், இந்த விவகாரத்தை முதல்-மந்திரியிடம் எடுத்துச்செல்லப்போவதாக கூறி உள்ளது.
அத்துடன், இந்த விவகாரத்தில் விசாரணை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X